17 ஆயிரம் ரன்களை எட்டுவாரா சச்சின்?

ஆஸ்திரேலியாவுடனான 3-வது சர்வதேச ஒரு தின கிரிக்கெட் ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் 17,000 ரன்களை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஒரு நாள் போட்டிகளில் ஏராளமான சாதனைகளை படைத்துள்ள சச்சின், மேலும் ஒரு சாதனையை எட்டவுள்ளார்.

ஒரு தின கிரிக்கெட் போட்டிகளில் அவர் 17,000 ரன்களை எடுக்க இன்னும் 79 ரன்கள் மட்டுமே தேவை. அவர் தற்போது 16,921 ரன்களைக் குவித்துள்ளார். இந்தப் போட்டியில் சச்சின் இந்த சாதனையைப் படைப்பார் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலாகவுள்ளனர்.

இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் தோனி கூறியதாவது:

ஒவ்வொரு முறை சச்சின் களத்தில் இறங்கும்போது அவர் அதிக ரன்கள் எடுக்கவேண்டும் என்று ஒவ்வொருவரும் எதிர்பார்க்கின்றனர். அவர் ரன் எடுப்பதோடு தன்னோடு இணைந்து விளையாடும் வீரரையும் ரன் எடுக்க அவகாசம் தருவார்.

17 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லைத் தொடுவது என்பது சாதாரண விஷயமல்ல. இது ஒரு மறக்கமுடியாத நிகழ்ச்சியாக இருக்கும்.

கடந்த 2 போட்டிகளில் சச்சின் சரியாக விளையாடாவிட்டாலும், சச்சின்-சேவாக் ஜோடி சிறப்பானதாக அமைந்துள்ளது.

அணி வீரர்கள் பேட்டிங் வரிசையில் மாற்றம் இல்லை என்றார் அவர்

0 comments:

Post a Comment