"பாகிஸ்தான் ஆட்டங்களை இந்தியாவில் நடத்தவேண்டாம்'

உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் பங்கேற்கும் ஆட்டங்களை இந்தியாவில் நடத்தவேண்டாம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கோரிக்கை விடுத்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2011-ல் இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தானின் ஆட்டங்களை இந்தியாவில் நடத்தவேண்டாம் என்று ஐசிசி-யிடம் பிசிபி தலைவர் இஜாஸ் பட் கேட்டுக் கொண்டுள்ளதாக வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விவகாரத்தில் அரசு என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு நடப்பது எங்களது கடமை என்று நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை இஜாஸ் பட் தெரிவித்தார்

0 comments:

Post a Comment