சேவாக், யுவராஜ் சிங் மும்பையில் தீவிர பயிற்சி

மும்பையில் நடைபெற்று வரும் கிரிக்கெட் பயிற்சி முகாமில் சேவாக், யுவராஜ் சிங் ஆகியோர் பங்கேற்று தீவிர பயிற்சி செய்தனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடவுள்ளது. முதல் ஆட்டம் வதோதராவில் அக்டோபர் 25-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்காக இந்திய கிரிக்கெட் அணி மும்பை பாந்த்ரா-குர்லா வளாக மைதானத்தில் பயிற்சி பெற்று வருகிறது. காயத்தால் விலகி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ள சேவாக், யுவராஜ் சிங் ஆகியோர் புதன்கிழமை தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற வலைப் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டனர்.

சச்சின், பிரவீண்குமார், முனாப் படேல், ஆசிஷ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், கேப்டன் தோனி ஆகியோரும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

0 comments:

Post a Comment