ஐபிஎல் அணியை வாங்குகிறார் மோகன்லால்

ஐபிஎல் கிரிக்கெட் அணிகளுள் ஒன்றை மலையாள நடிகர் மோகன்லால் வாங்கவுள்ளார். கொச்சியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் கேரள மாநில தட களத்தின் நல்லெண்ணத் தூதராக மோகன்லால் தேர்வு செய்யப்பட்டார். விழாவின் முடிவில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தட கள விளையாட்டின் நல்லெண்ணத் தூதராக நியமித்து என்னை விளையாட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் கல்லூரியில் படிக்கும்போதே நான் மல்யுத்த வீரன் என்பது பலருக்குத் தெரியாது. நானும், இயக்குநர் பிரியதர்ஷனும் இணைந்து ஐபிஎல் அணியை வாங்கப் போவதாக செய்துள்ளன. அது உண்மைதான். ஏலத்தின் மூலம் ஐபிஎல் அணியை வாங்கப் போகிறேன்....

17 ஆயிரம் ரன்களை எட்டுவாரா சச்சின்?

ஆஸ்திரேலியாவுடனான 3-வது சர்வதேச ஒரு தின கிரிக்கெட் ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் 17,000 ரன்களை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஒரு நாள் போட்டிகளில் ஏராளமான சாதனைகளை படைத்துள்ள சச்சின், மேலும் ஒரு சாதனையை எட்டவுள்ளார். ஒரு தின கிரிக்கெட் போட்டிகளில் அவர் 17,000 ரன்களை எடுக்க இன்னும் 79 ரன்கள் மட்டுமே தேவை. அவர் தற்போது 16,921 ரன்களைக் குவித்துள்ளார். இந்தப் போட்டியில் சச்சின் இந்த சாதனையைப் படைப்பார் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலாகவுள்ளனர். இதுகுறித்து...

இந்தியாவுடன் மீண்டும் கிரிக்கெட்: யூனிஸ்கான் விருப்பம்

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மீண்டும் கிரிக்கெட் போட்டிகளைத் துவங்கவேண்டும் என்று பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ்கான் கூறினார். கராச்சியில் வியாழக்கிழமை விளையாட்டு உபகரணங்கள் கடையைத் துவக்கிவைத்த பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே உடனடியாக இந்தியாவுடன், கிரிக்கெட் போட்டிகளைத் துவங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) அதிகாரிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் இஜாஸ் பட் சந்தித்துப் பேசவுள்ளார். இது ஒரு...

அம்பயர் டேவிட் ஷெப்பர்ட் மரணம்

கிரிக்கெட் அரங்கின் மிகச் சிறந்த அம்பயராக விளங்கிய டேவிட் ஷெப்பர்ட்(68) மரணம் அடைந்தார். இங்கிலாந்தை சேர்ந்தவர் டேவிட் ஷெப்பர்ட். கடந்த 1965ல் கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், கிளவுசஸ்டர்ஷயர் கவுன்டி அணிக்காக விளையாடினார். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து 1979ல் விடைபெற்ற இவர், 1983ல் உலக கோப்பை போட்டியில் அம்பயராக அறிமுகமானார். தொடர்ந்து மூன்று உலக கோப்பை பைனல்களில்(1996, 1999, 2003) அம்பயராக பணியாற்றி சாதனை படைத்தார். கடந்த 2005ல் ஓய்வு பெற்ற இவர், 172 ஒரு நாள் மற்றும் 92 டெஸ்ட் போட்டிகளில் அம்பயராக பணியாற்றியுள்ளார். களத்தில் வீரர்களுடன்...

தோனிக்கு கில்கிறிஸ்ட் "அட்வைஸ்'

இந்திய கேப்டன் தோனி, "டாப்-ஆர்டரில்' பேட்டிங் செய்ய வேண்டும்,'' என ஆலோசனை அளித்துள்ளார் கில்கிறிஸ்ட். இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து வெற்றிகளை குவிக்க, கேப்டன் தோனி மூன்றாவது வீரராக களமிறங்க வேண்டும் என சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார். இதே கருத்தை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கில்கிறிஸ்டும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது: இந்திய கேப்டன் தோனி அதிரடி ஆட்டக்காரர். ஒரு நாள் போட்டிகளில் அவர் டாப்-ஆர்டரில் களமிறங்குவது அணிக்கு பலம் அளிக்கும். மிகச் சிறந்த வீரரான அவர், அதிக ஓவர்கள் விளையாட வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவர்....

இந்திய அணிக்கு கங்குலி "அட்வைஸ்'

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு, முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஆலோசனை வழங்கியுள்ளார். இது குறித்து கங்குலி கூறியது: வதோதராவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி போராடி தான் தோல்வி அடைந்துள்ளது. ஒரு சில தவறுகளை திருத்திக் கொண்டால், நாக்பூரில் நாளை நடக்க உள்ள இரண்டாவது போட்டியில் சாதிக்கலாம். பேட்டிங் ஆர்டரை பலப்படுத்தும் நோக்கில், கேப்டன் தோனி 3 வது வீரராக களமிறங்குவது நல்லது. அதிரடியாக ஆடக் கூடிய தோனிக்கு, பேட்டிங் செய்ய அதிக ஓவர்கள் தேவை. அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எழுச்சியுடன் செயல்படுவது...

200 விக்கெட், 1,000 ரன்கள்: ஹர்பஜன் சாதனை

சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 200 விக்கெட் மற்றும் 1,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் ஹர்பஜன் சிங் புரிந்தார். வதோதராவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் 1,000 ரன்களை ஹர்பஜன் எட்டினார். 200 விக்கெட்டுகளை அவர் முன்னதாகவே வீழ்த்தியிருந்தார். 200 விக்கெட்டுகள், 1,000 ரன்கள் எடுக்கும் 3-வது இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்பஜன் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே இந்தச் சாதனையை கபில்தேவ், அஜித் வடேகர் ஆகியோர் செய்துள்ளனர். போட்டியில் பதிவான மற்ற சாதனைகள் வருமாறு: இந்த ஆட்டத்தில் 73 ரன் குவித்த ஆஸ்திரேலிய...

2-வது போட்டியில் யுவராஜ் விளையாடுவார்'

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் ஆட்டத்தில் யுவராஜ் சிங் விளையாடுவார் என்று இந்திய அணியின் கேப்டன் எம்எஸ் தோனி கூறினார். வதோதராவில் நிருபர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து விலகிய யுவராஜ் சிங் ஆஸ்திரேலியாவுடனான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகம். ஆனால் 2-வது ஒரு நாள் ஆட்டத்தில் அவர் நிச்சயம் விளையாடுவார் என்பதை உறுதியாக சொல்கிறேன் என்றார் அவர். முதல் ஒரு நாள் ஆட்டத்தில் பங்கேற்கும் 11 இந்திய அணி வீரர்களின் பெயர்களைத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். மேலும் அவர்...

மீள்வதற்கு வாய்ப்புள்ளது: தோனி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முதலில் பின்னடைவை சந்தித்தாலும், மீண்டு வருவதற்கு வாய்ப்பு உள்ளது,'' என தோனி தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியது: ஏழு போட்டிகள் கொண்ட தொடர் என்பதால் முதலில் சில ஆட்டங்களில் சரியாக விளையாடாவிட்டாலும், பின் மீண்டு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதேநேரம் 4 அல்லது 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து விட்டால், தொடர் நம் கையை விட்டுப் போய்விடும். தீவிரமான பயிற்சியின் போது சிறு காயங்கள் ஏற்படுவது இயற்கைதான். இதனால் பயப்படத் தேவையில்லை. அனைத்து வீரர்களும் உடற்தகுதியுடன் உள்ளோம்....

கிரிக்கெட்: டாஸ் வென்று ஆஸ்திரேலியா பேட்டிங்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வதோதராவில் தொடங்கியது. ஸ்கோர் விவரம்டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. டிம் பைனியும், வாட்சனும் களம் இறங்கினர். இரண்டாவது ஓவரிலேயே நெஹ்ராவின் பந்துவீச்சில் வாட்சன் வெளியேறினார். அணி விவரம்: இந்தியா: தோனி (கேப்டன்), வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர், கம்பீர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, முனாப் படேல், ஆஷிஷ் நெஹ்ரா, பிரவீண் குமார், அமித் மிஸ்ரா, சுதீப் தியாகி, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா. ஆஸ்திரேலியா:...

இந்தியாவில் ஒரு தினத் தொடர்: உலகக் கோப்பைக்கான முன்னோட்டம்

தற்போதைய தொடர் 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான முன்னோட்டம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்தார். இந்தியாவுடன் ஆஸ்திரேலிய அணி 7 ஆட்டங்கள் கொண்ட ஒரு தினத் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளது. இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பாண்டிங் வியாழக்கிழமை கூறியதாவது: இந்தத் தொடர் எங்கள் அணிக்கு மிக முக்கியமானது. உலகக் கோப்பை போட்டி இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தத் தொடர் இந்தியாவைப் பற்றி அறிய இளம் வீரர்களுக்கு உதவிகரமாக இருக்கும். இத் தொடரில் எந்த அளவுக்கு கற்றுக் கொள்ள முடியுமோ,...

ஆஸ்திரேலியாவை வெல்வது கடினம்

ஆஸ்திரேலிய அணியை வெல்வதுதான் கடினம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரீம் ஸ்வான் கூறினார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவுடன் டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் விளையாட தென்னாப்பிரிக்க செல்லவுள்ளது. இந்நிலையில் நிருபர்களுக்கு ஸ்வான் அளித்த பேட்டி: கிரிக்கெட்டில் சிறந்த அணியாக ஆஸ்திரேலியா விளங்குகிறது. ஒவ்வொரு இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கும், ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதுதான் கனவாக இருக்கும். அந்த அணியை வெல்வது கடினம். இருப்பினும் கடந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வென்றோம் என்றார் அவ...

இந்தியாவுக்கு "நம்பர்-1' வாய்ப்பு

சொந்த மண்ணில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றும் பட்சத்தில், உலகின் "நம்பர்-1' அணியாக முன்னேற இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இந்தியாவில் நடக்கிறது. முதல் போட்டி நாளை வதோதராவில் நடக்கிறது. தற்போது ஒரு நாள் ரேங்கிங் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணி (124 புள்ளிகள்), இத்தொடரில் ஆஸ்திரேலியாவில் (128 புள்ளிகள்) வீழ்த்தினால் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறலாம். "நம்பர்-1' வாய்ப்பு: ஒரு நாள் தொடரை 4-3 கணக்கில் இந்தியா கைப்பற்றினால் 127 புள்ளிகளை பெற்று முதலிடத்துக்கு...

சேவாக், யுவராஜ் சிங் மும்பையில் தீவிர பயிற்சி

மும்பையில் நடைபெற்று வரும் கிரிக்கெட் பயிற்சி முகாமில் சேவாக், யுவராஜ் சிங் ஆகியோர் பங்கேற்று தீவிர பயிற்சி செய்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடவுள்ளது. முதல் ஆட்டம் வதோதராவில் அக்டோபர் 25-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணி மும்பை பாந்த்ரா-குர்லா வளாக மைதானத்தில் பயிற்சி பெற்று வருகிறது. காயத்தால் விலகி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ள சேவாக், யுவராஜ் சிங் ஆகியோர் புதன்கிழமை தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற வலைப் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டனர்....

அரையிறுதியில் இன்று நியூசெüத்வேல்ஸ் - விக்டோரியா மோதல்

சாம்பியன்ஸ்லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் நியூசெüத் வேல்ஸ், விக்டோரியா அணிகள் புதன்கிழமை மோதவுள்ளன. சாம்பியன்ஸ்லீக் டி20 போட்டி கடந்த 8-ம் தேதி துவங்கியது. மொத்தம் 12 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன. இதில் இந்தியாவைச் சேர்ந்த டெல்லி டேர்டெவில்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர், ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகளும் அடங்கும். ஆனால் சூப்பர் 8 பிரிவில் உள்ளூர் அணிகள் தோல்வியுற்று வெளியேறின. அரை இறுதிக்கு விக்டோரியா, நியூசெüத் வேல்ஸ், கேப் கோப்ராஸ், டிரினிடாட் அண்ட் டொபாக்கோ அணிகள் முன்னேறியுள்ளன. இந்நிலையில் முதல் அரை இறுதி...

இந்திய மண்ணில் வெல்வது கடினம்

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில், அவ்வளவு எளிதாக வெல்ல முடியாது,'' என, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாண்டிங் தெரிவித்து உள்ளார். ஆஸ்திரேலிய அணி, இந்தியாவில் ஏழு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதன் முதல் போட்டி வரும் 25ம் தேதி வதோதராவில் நடக்க உள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாண்டிங் கூறியது: இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் தோல்வியடையச் செய்வது என்பது எப்போதும் மிகவும் கடினம். வெளிநாட்டு தொடர்களின் போது விளையாடுவதை விட, தோனி தலைமையிலான இந்திய வீரர்கள், உள்ளூரில் உறுதியாக, சிறப்பாக விளையாடுவார்கள். சாம்பியன்ஸ் டிராபியில்...

2-வது சுற்றில் சானியா

ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் விளையாட இந்தியாவின் சானியா மிர்சா தகுதி பெற்றுள்ளார். ஒசாகாவில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சானியா 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் இஸ்ரேல் வீராங்கனை ஷாகர் பீரை வீழ்த்தினார். மகளிர் இரட்டையர் ஆட்டங்களில் ஷாகர் பீருடன் இணைந்து சானியா விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 2-வது சுற்றில் உக்ரைனின் விக்டோரியாவை எதிர்த்து சானியா விளையாடவுள்ள...

சேவாக், தினேஷ் அதிரடியில் டெல்லி வெற்றி

சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் குரூப் டி பிரிவில் வயாம்பா லெவன்ஸ் அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் வீழ்த்தியது. முதலில் ஆடிய டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய வயாம்பா லெவன்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வயாம்பா வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். ஜயவர்த்தனா மட்டும் நிலைத்து ஆடி 53 ரன்கள் சேர்த்தார். டெல்லியின் நானஸ் 4 விக்கெட்டுகளும், மெக்ராத் 2 விக்கெட்டுகளும்,...

யாருக்கு "சூப்பர்-8' வாய்ப்பு?

சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவின் ஈகிள்ஸ், இங்கிலாந்தின் சசக்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி "சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறும் என்பதால், விறுவிறுப்பான போட்டியை காணலாம். சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து, உள்ளூர் "டுவென்டி-20' அணிகள் பங்கேற்கின்றன. டில்லியில் இன்று நடக்கும் "பி' பிரிவு கடைசி லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவின் ஈகிள்ஸ் அணி, இங்கிலாந்தின் சசக்ஸ் அணியை சந்திக்கிறது. இப்பிரிவில் இடம்...

கடைசி பந்தில் டெக்கான் தோல்வி

சாம்பியன்ஸ் லீக் தொடரின் பரபரப்பான போட்டியில் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி கடைசி பந்தில் பரிதாபமாக வீழ்ந்தது. துணிச்சலாக போராடிய சாமர்சட் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று ஐதராபாத்தில் நடந்த "ஏ' பிரிவு லீக் போட்டியில் ஐ.பி.எல்., நடப்பு சாம்பியனான இந்தியாவின் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, இங்கிலாந்தின் சாமர்சட் அணியை சந்தித்தது. டாஸ் வென்ற சாமர்சட் அணி கேப்டன் ஜஸ்டின் லாங்கர், பீல்டிங் தேர்வு செய்தார். லட்சுமண் துவக்கம்: டெக்கான் அணி சார்பில் சற்றும்...

இளம் கிரிக்கெட் வீரர் சுட்டுக் கொலை

இளம் கிரிக்கெட் வீரர் ககன்தீப் சிங் (படம்) வெள்ளிக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். மீரட்டில் உள்ள உணவு விடுதி ஒன்றுக்கு இரவு 11 மணி அளவில் ககன்தீப்பும், அவரது நண்பரும் சென்றுள்ளனர். அப்போது அந்த உணவு விடுதிக்கு வந்த ராகுல் என்பவர் தனது நண்பர்களுடன் சாப்பிட வந்துள்ளார். உணவு அளிப்பதில் தாமதம் ஏற்படவே உணவு விடுதியின் உரிமையாளர் ஷாநவாஸýடன் ராகுல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், காரில் இருந்து இறங்கி வந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், ஷாநவாஸýம், இச்சம்பவத்துக்கு தொடர்பில்லாத ககன்தீப்பும் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக...

"பாகிஸ்தான் ஆட்டங்களை இந்தியாவில் நடத்தவேண்டாம்'

உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் பங்கேற்கும் ஆட்டங்களை இந்தியாவில் நடத்தவேண்டாம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கோரிக்கை விடுத்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2011-ல் இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் நடைபெறவுள்ளன. இந்நிலையில் பாகிஸ்தானின் ஆட்டங்களை இந்தியாவில் நடத்தவேண்டாம் என்று ஐசிசி-யிடம் பிசிபி தலைவர் இஜாஸ் பட் கேட்டுக் கொண்டுள்ளதாக வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விவகாரத்தில் அரசு என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு நடப்பது எங்களது கடமை என்று நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை இஜாஸ் பட்...

காம்பிர் அணி பரிதாப தோல்வி!

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் காம்பிர் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணி, விக்டோரியன் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. உள்ளூர் "டுவென்டி-20' தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற 12 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று டில்லியில் நடந்த "டி' பிரிவு லீக் போட்டியில் இந்தியாவின் டில்லி டேர்டெவில்ஸ், ஆஸ்திரேலியாவின் விக்டோரியன் புஷ்ரேஞ்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டில்லி அணி கேப்டன் காம்பிர், பேட்டிங் தேர்வு செய்தார். விக்கெட் மடமட: ஹார்வுட் வீசிய முதல் ஓவரில் சேவக் இரண்டு பவுண்டரி...

தோனி அணிக்கு "திரில்' வெற்றி

சாலஞ்சர் டிராபி தொடரின் முதல் போட்டியில், தோனி தலைமையிலான இந்தியா "புளூ' அணி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. உள்ளூர் என்.கே.பி., சால்வி சாலஞ்சர் டிராபி கிரிக்கெட் தொடர் நாக்பூரில் நேற்று துவங்கியது. இதில், இந்தியா புளூ, ரெட், கிரீன் என மூன்று அணிகள் மோதுகின்றன. நேற்று நடந்த போட்டியில், பத்ரிநாத் தலைமையிலான இந்திய "ரெட்' அணி, தோனி தலைமையிலான இந்திய "புளூ' அணியுடன் மோதியது. டாஸ் ஜெயித்த இந்தியா "ரெட்' அணி, பேட்டிங் தேர்வு செய்தது. அதிரடி துவக்கம்: இந்தியா "ரெட்' அணிக்கு தவான், முரளி விஜய் துவக்கம் தந்தனர். இந்த ஜோடி அதிரடியாக...