தேர்வுக்கு மீண்டும் "கட்' அடித்த தோனி

இடைவிடாத போட்டிகள் காரணமாக, தனது கல்லூரிப் பருவத் தேர்வில் பங்கேற்காமல், இரண்டாவது முறையாக "கட்' அடித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி.


ராஞ்சியில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில், விளையாட்டு ஒதுக்கீட்டின் அடிப்படையில், அலுவலக நிர்வாகம் மற்றும் செயலாளர் நடைமுறைகள் கோர்ஸ் படித்து வருகிறார் தோனி. கடந்த ஆண்டு லண்டனில் நடந்த 2 வது "டுவென்டி-20' உலககோப்பை காரணமாக, முதலாம் ஆண்டு தேர்வில் தோனி பங்கேற்க வில்லை.


இதே போல சமீபத்தில் வெஸ்ட் இண்டீசில் நடந்த மூன்றாவது "டுவென்டி-20' உலககோப்பை காரணமாக இரண்டாம் ஆண்டு தேர்விலும் தோனியால் பங்கேற்க முடியவில்லை. இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இதுவரை ஒரு தேர்வு கூட தோனி எழுத வில்லை.


இது குறித்து கல்லூரியின் தேர்வுத் துறை தலைவர் சின்கா கூறுகையில்,"" உலககோப்பையில் பங்கேற்றதால், தோனி இந்த ஆண்டும் தேர்வில் பங்கேற்க வில்லை. அடுத்த ஆண்டு தேர்வில் பங்கேற்கும் பட்சத்தில், மொத்தம் உள்ள ஆறு பருவத் தேர்வுகளையும் எழுத வேண்டிய நிலை ஏற்படும். இல்லாவிட்டால், 5 ஆண்டுகளுக்குள் அனைத்து தேர்வுகளையும் எழுதி முடிக்க வேண்டும். இதுவரை ஒரு தேர்வு கூட தோனி எழுத வில்லை,'' என்றார்.


சலுகை இல்லை: செயின்ட் சேவியர் கல்லூரி தன்னாட்சி அந்தஸ்து பெற்றது. இதனால் கல்லூரி நிர்வாகம், கிரிக்கெட் போட்டிகள் இல்லாத நாட்களில் தேர்வுகளை நடத்தலாம். ஆனால் தோனிக்கு தனிச் சலுகை அளிக்க கல்லூரி நிர்வாகம் முன்வரவில்லை எனத் தெரிகிறது

0 comments:

Post a Comment