ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி ஜூன் 7ல் தேர்வு

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு, வரும் ஜூன் 7ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளது.

இலங்கையில் உள்ள தம்புலாவில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நான்கு அணிகள் பங்கேற்கின்றன.

இத்தொடருக்கான இந்திய அணி வீரர்களை, ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக்குழு அடுத்த மாதம் 7ம் தேதி டில்லியில் தேர்வு செய்ய உள்ளனர். வரும் ஜூன் 15ம் தேதி நடக்கும் தொடரின் முதல் போட்டியில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

இந்திய அணி, தனது முதல் போட்டியில் வங்கதேச அணியை (ஜூன் 16) சந்திக்கிறது. அதன்பின் பாகிஸ்தான் (ஜூன் 19), இலங்கை (ஜூன் 22) அணிகளுடன் மோதுகிறது. இத்தொடரின் பைனல் அடுத்த மாதம் 24ம் தேதி நடக்கிறது.

0 comments:

Post a Comment