புதிய "ஸ்பான்சர்' தேடுகிறது இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணியுடனான, சஹாரா நிறுவனத்தின் ஒப்பந்தம் அடுத்த மாதம் நிறைவடைகிறது. இதனால் புதிய "ஸ்பான்சருக்கு' அழைப்பு விடுத்துள்ளது இந்திய அணி.


உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பாக இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் "ஸ்பான்சராக' தற்போது சஹாரா நிறுவனம் உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு சுமார் 400 கோடி ரூபாய் கொடுத்து, இந்திய அணிக்கு "ஸ்பான்சர்' செய்யும் உரிமையை சஹாரா பெற்று இருந்தது.


ஒப்பந்த காலம் கடந்த ஆண்டு டிசம்பரில் முடிவடைந்தது. ஆனால் அப்போது இந்திய அணிக்கு "ஸ்பான்சர்' யாரும் கிடைக்க வில்லை. இதனையடுத்து சஹாரா நிறுவனத்தின் ஒப்பந்தம் மேலும் 6 மாதம் காலம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த மாதத்துடன் ஒப்பந்த காலம் முடிவடைகிறது. இதனால் புதிய "ஸ்பான்சரை' தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ., ) ஆர்வம் காட்டி வருகிறது.


இதையடுத்து இந்திய சீனியர் அணி, "ஏ' அணி, 19 வயதிக்குட்பட்ட அணி மற்றும் பெண்கள் அணிக்கு "ஸ்பான்சராக' இருக்க விரும்புபவர்களுக்கான புதிய ஏலத்தை பி.சி.சி.ஐ.,நேற்று அறிவித்தது. ஏலத்துக்கான விண்ணப்பம் நேற்று முதல் பி.சி.சி.ஐ., அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் விலை ரூ. 5 லட்சம்.

தற்போது ஐ.பி.எல்., ஏலத்தில், புனே அணியை ரூ. 1700 கோடிக்கு விலைக்கு வாங்கிய சஹாரா அணி, மீண்டும் இந்திய அணிக்கு "ஸ்பான்சர்' செய்வது கடினம் தான். இதனால் புதிய ஸ்பான்சரை, எதிர்நோக்கியுள்ளது இந்திய அணி.

0 comments:

Post a Comment