உலகக்கோப்பை ஹீரோ

1996-ம் ஆண்டு உலகக்கோப்பை ஹீரோக்கள் என்று இருவரைக் குறிப்பிடலாம். ஜெயசூர்யா, அரவிந்த டி சில்வா ஆகிய இருவர் தான் அந்த ஹீரோக்கள். ÷1965-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் பிறந்தார் அரவிந்த டி சில்வா. வலது கை ஆட்டக்காரரான இவர், 1984-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் முதன்முறையாக விளையாடினார்.  அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் ஆடும் வாய்ப்பு டி சில்வாவுக்கு கிட்டியது. ஸ்வீப் ஷாட் அடிப்பதில் வல்லவர். 1996-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் முதல் சுற்றில்...

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி ஜூன் 7ல் தேர்வு

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு, வரும் ஜூன் 7ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளது. இலங்கையில் உள்ள தம்புலாவில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நான்கு அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடருக்கான இந்திய அணி வீரர்களை, ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக்குழு அடுத்த மாதம் 7ம் தேதி டில்லியில் தேர்வு செய்ய உள்ளனர். வரும் ஜூன் 15ம் தேதி நடக்கும் தொடரின் முதல் போட்டியில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.  இந்திய அணி, தனது முதல் போட்டியில் வங்கதேச அணியை...

நம்பர் ஒன் ஆல்-ரவுண்டர்

நம்பர் ஒன் ஆல்-ரவுண்டர் என்று பெயரெடுத்தவர் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஷான் போலாக். இவர் 1973 ஜூலை 16-ம் தேதி தென்னாப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே பெüலிங், பேட்டிங் என இரண்டிலும் சிறந்து விளங்கிய போலாக், 1995-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக களம் கண்டார். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போலாக், அடுத்த சில நாள்களிலேயே இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் களம்கண்டார். அப்போதைய வேகப்பந்து வீச்சாளர் ஆலன்டொனால்டிடம் இருந்து பந்துவீச்சு நுணுக்கங்களை கற்றுக்கொண்ட போலாக், டொனால்டின்...

தேர்வுக்கு மீண்டும் "கட்' அடித்த தோனி

இடைவிடாத போட்டிகள் காரணமாக, தனது கல்லூரிப் பருவத் தேர்வில் பங்கேற்காமல், இரண்டாவது முறையாக "கட்' அடித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி.ராஞ்சியில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில், விளையாட்டு ஒதுக்கீட்டின் அடிப்படையில், அலுவலக நிர்வாகம் மற்றும் செயலாளர் நடைமுறைகள் கோர்ஸ் படித்து வருகிறார் தோனி. கடந்த ஆண்டு லண்டனில் நடந்த 2 வது "டுவென்டி-20' உலககோப்பை காரணமாக, முதலாம் ஆண்டு தேர்வில் தோனி பங்கேற்க வில்லை.இதே போல சமீபத்தில் வெஸ்ட் இண்டீசில் நடந்த மூன்றாவது "டுவென்டி-20' உலககோப்பை காரணமாக இரண்டாம் ஆண்டு தேர்விலும் தோனியால் பங்கேற்க முடியவில்லை....

புதிய "ஸ்பான்சர்' தேடுகிறது இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணியுடனான, சஹாரா நிறுவனத்தின் ஒப்பந்தம் அடுத்த மாதம் நிறைவடைகிறது. இதனால் புதிய "ஸ்பான்சருக்கு' அழைப்பு விடுத்துள்ளது இந்திய அணி.உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பாக இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் "ஸ்பான்சராக' தற்போது சஹாரா நிறுவனம் உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு சுமார் 400 கோடி ரூபாய் கொடுத்து, இந்திய அணிக்கு "ஸ்பான்சர்' செய்யும் உரிமையை சஹாரா பெற்று இருந்தது. ஒப்பந்த காலம் கடந்த ஆண்டு டிசம்பரில் முடிவடைந்தது. ஆனால் அப்போது இந்திய அணிக்கு "ஸ்பான்சர்' யாரும் கிடைக்க வில்லை. இதனையடுத்து சஹாரா...

சாம்பியன்ஸ் லீக் : 10 அணிகள் பங்கேற்பு

தென் ஆப்ரிக்காவில் நடக்க உள்ள "டுவென்டி-20' சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில், இம்முறை 10 அணிகள் பங்கேற்க உள்ளன.உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகள் பங்கேற்கும் "டுவென்டி-20' சாம்பியன்ஸ் லீக் தொடர், ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. இந்த ஆண்டு இத்தொடர் வரும் செப். 10 ம் தேதி முதல் 26 வரை தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது.இங்கிலாந்து விலகல்: இந்த முறை இந்தியா தரப்பில் ஐ.பி.எல்., சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் பங்கேற்க உள்ளன. இந்நிலையில் போட்டி அட்டவணையை மாற்றுமாறு, இங்கிலாந்து...

உல​கக்​கோப்​பை​யில் அசத்​தி​ய​வர்

1999-ல் இங்​கி​லாந்​தில் நடை​பெற்ற உல​கக் கோப்பை கிரிக்​கெட்​டில் அனைத்து போட்​டி​க​ளி​லும் அதி​ர​டி​யாக விளை​யாடி அனை​வ​ரின் கவ​னத்​தை​யும் ஈர்த்​த​வர் தென்​னாப்​பி​ரிக்​கா​வின் முன்​னாள் ஆல்​ர​வுண்​டர் லான்ஸ் குளூஸ்​னர்.​÷இ​வர் 1971 செப்​டம்​பர் 4-ம் தேதி தென்​னாப்​பி​ரிக்​கா​வின் டர்​ப​னில் பிறந்​தார்.​ இடது கை பேட்ஸ்​மேன் மற்​றும் வலது கை வேகப்​பந்து வீச்​சா​ள​ரான குளூஸ்​னர்,​​ 1996 ஜன​வ​ரி​யில் இங்​கி​லாந்​துக்கு எதி​ரான ஒரு தின போட்​டி​யில் தென்​னாப்​பி​ரிக்க அணிக்​காக முதன்​மு​த​லாக களம் கண்​டார்.​ ​÷அ​தன்​பி​றகு அதே ஆண்​டில் கொல்​கத்​தா​வில்...

என்.பி.ஏ., பாணியில் ஐ.பி.எல்., போட்டி

அமெரிக்காவின் என்.பி.ஏ., (தேசிய கூடைப்பந்து கூட்டமைப்பு) பாணியில் ஐ.பி.எல்., போட்டிகளை நடத்த, இந்திய கிரிக்கெட் போர்டு ஆலேசானை நடத்தி வருகிறது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நிர்வாகிகள் கூட்டம் கடந்த 17 ம் தேதி மும்பையில் நடந்தது. இக்கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள 4 வது ஐ.பி.எல்., தொடரில், போட்டிகள் நடத்தும் முறையில் புதிய மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடந்தது. இதன் படி என்.பி.ஏ., தொடரில் இருக்கும் போட்டி முறைகளை பின்பற்றி, ஐ.பி.எல்., போட்டிகளை நடத்துவது என பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது. இது குறித்து அடுத்த மாதம், ஐ.பி.எல்.,...

அலுமினிய கிரிக்கெட் பேட் அறிமுகம்

கிரிக்கெட் அரங்கில் இன்னொரு புரட்சி. அலுமினியத்தால் தயாரிக்கப்பட்ட பேட், புதுப்பொலிவுடன் அறிமுகமாகிறது.கிரிக்கெட்டில் அவ்வப்போது புதுமைகள் அரங்கேறும். எஸ்.ஜி, கூக்கபரா என இரண்டு வகை பந்துகள் உண்டு. இதே போன்று பல்வேறு வகையான பேட் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்திய ஐ.பி.எல்., தொடரில் மிக நீளமான கைப்பிடி கொண்ட "மங்கூஸ்' வகை பேட் பரபரப்பாக பேசப்பட்டது. இதனை பயன்படுத்திய ஆஸ்திரேலிய வீரர் ஹைடன், சில போட்டிகளில் அதிரடி காட்டினார்.இந்திய கண்டுபிடிப்பு:தற்போது அலுமினியத்தாலான பேட் ஒன்றை இந்தியாவை சேர்ந்த இன்ஜினியர் விவேக் லகோத்தியா உருவாக்கியுள்ளார். "டென்னிஸ்...

மூன்று பைனல் வேண்டும்

உலக கோப்பை போன்ற சில முக்கியமான தொடர்களில் "டுவென்டி-20' போட்டிக்கு, மூன்று பைனல்கள் நடத்த வேண்டும்,'' என, ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாண்டிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.சமீபத்தில் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் லீக், "சூப்பர்-8' மற்றும் அரையிறுதி என பங்கேற்ற 6 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. முக்கியமான பைனலில் கோட்டை விட, கோப்பையை இங்கிலாந்து அணி தட்டிச் சென்றது. இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி கேப்டன் பாண்டிங் கூறியது:தற்போதைய ஆஸ்திரேலிய "டுவென்டி-20' அணி, சிறந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவர்கள்...

டெஸ்ட் வீரர்கள்:​ யூசுப் வேதனை

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதால்,​​ தரம்வாய்ந்த டெஸ்ட் வீரர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் முகமது யூசுப் வேதனை தெரிவித்தார்.இந்தாண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடியது.​ இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக விசாரணைக் கமிட்டி முன் ஆஜரான முகமது யூசுப்,​​ மேலும் கூறியது:​ ​பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு தரம்வாய்ந்த வீரர்கள் இல்லை.​தற்போதுள்ள அணி இருபது ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதற்கு...

மிடில் ஆர்டரில் கலக்கியவர்

ஆஸ்திரேலியாவின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகத் திகழ்ந்தவர் டேமியன் மார்டின்.இவர் 1971 அக்டோபர் 21-ம் தேதி ஆஸ்திரேலியாவின் டார்வினில் பிறந்தார்.​ வலது கை பேட்ஸ்மேனான இவர்,​​ 1992-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்காக முதன்முதலாக களம் கண்டார்.​ ​அப்போது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கிய அவர்,​​ அந்த தொடரில் சிறப்பாக விளையாடி 168 ரன்கள் குவித்தார்.​ அதே ஆண்டில் ஒருதின அணியிலும் இடம்பிடித்தார்.​ ​2003-ல் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ரிக்கி...

இந்திய வீரர்களுக்கு இங்கிலாந்தில் அவமானம்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து சென்ற, இந்திய அணியினர் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் தொடரில் சிறப்பாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, முன்னணி வீரர் மானவ்ஜித் சிங் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் டார்சட் நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் சார்பில், உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதில் பங்கேற்க சென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு, இங்கிலாந்து போக்குவரத்து துறை அதிகாரிகள் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளனர். இது குறித்து அணியின் மானேஜர் பத்மனாபன், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு, எழுதிய கடிதத்தில்...

தோனி-3, காம்பிர்-2, ஜடேஜா-0

டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் வீழ்ச்சிக்கு வீரர்களின் மோசமான ஆட்டமே முக்கிய காரணம். வீரர்களின் செயல்பாட்டுக்கு ஏற்ப, அவர்களது "மார்க்' வருமாறு:ரெய்னா-7/10போட்டி- 5, ரன்- 219, அதிகபட்சம்- 101, சராசரி- 43.80, ஸ்டிரைக் ரேட் -146. இந்திய அணி சொதப்பிய போதும், ரெய்னா மட்டும் நம்பிக்கை அளித்தார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சதம் அடித்த இவர், "டுவென்டி-20' வரலாற்றில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இவரும் "ஷார்ட் பிட்ச்' பந்துகளை சமாளிப்பதில் திணறினார்.நெஹ்ரா-6/10போட்டி-5, ஓவர்- 20, விக்.,- 10இந்திய அணியின் சிறந்த...

4-வது முறையாக உலக சாம்பியன்

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் (40) 4வது முறையாக பெற்றுள்ளார்.நடப்பு சாம்பியனான அவர், பல்கேரியாவின் வெஸலின் டொபலோவை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.12 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் ஆனந்த் 6.5 - 5.5 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று பட்டம் வென்றார்.11 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 5.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இந்நிலையில் கடைசி சுற்று ஆட்டம் செவ்வாய்க்கிழமை மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்றது.கடைசி சுற்று ஆட்டத்தில் கறுப்பு காயுடன் விளையாடினார் ஆனந்த். கடைசி ஆட்டமும்...