இந்திய அணிகளில் வெளிநாட்டு வீரர்கள்



சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில், மைக்கேல் ஹசி, டுவைன் பிராவோ, ஷேன் வாட்சன் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள், தங்கள் உள்ளூர் அணிக்காக விளையாடாமல், இந்திய அணிகளுக்காக விளையாட உள்ளனர்.

இந்தியாவில், சர்வதேச உள்ளூர் சாம்பியன் அணிகள் பங்கேற்கும், ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், செப்.17 முதல் அக்.6 வரை நடக்கிறது. 

இதில், 6வது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று இடங்களை பிடித்த மும்பை, சென்னை, ராஜஸ்தான் அணிகளுடன், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் ஹீட், பெர்த் ஸ்கார்சர்ஸ், தென் ஆப்ரிக்காவின் லயன்ஸ், டைட்டன்ஸ், வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட் அண்டு டுபாகோ உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.


தகுதி சுற்று:

இந்தியா (3), ஆஸ்திரேலியா (2), தென் ஆப்ரிக்கா (2), வெஸ்ட் இண்டீசை (1) சேர்ந்த 8 அணிகள் நேரடியாக பிரதான சுற்றில் விளையாடுகின்றன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 உள்ளூர் அணிகள் தகுதிச் சுற்றில் பங்கேற்கின்றன. 

ஐதராபாத்தில் செப்.17-20ம் தேதிகளில் நடக்கும் தகுதிச் சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும்.


இரண்டு பிரிவு:

பிரதான சுற்றில், 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். "ஏ' பிரிவில் ராஜஸ்தான், மும்பை, லயன்ஸ், பெர்த் மற்றும் தகுதிச் சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணிகள் இடம் பெற்றுள்ளன. "பி' பிரிவில் சென்னை, டைட்டன்ஸ், பிரிஸ்பேன், டிரினிடாட் அண்டு டுபாகோ மற்றும் தகுதிச் சுற்றில் 2வது இடம் பிடிக்கும் அணிகள் இடம் பெற்றுள்ளன. செப்.21ம் தேதி நடக்கவுள்ள "ஏ' பிரிவுக்கான லீக் போட்டியில், ராஜஸ்தான், மும்பை அணிகள் மோதுகின்றன.


உத்தேச அணி:

இத்தொடரில் பங்கேற்கும் 12 அணிகளும், உத்தேச அணியை அறிவித்தன. பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிகளில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள், தங்கள் நாட்டை சேர்ந்த உள்ளூர் அணிகளிலும் இடம் பெற்றுள்ளனர். இரண்டு அணிகளில் இடம் பெற்றுள்ள 15 வெளிநாட்டு வீரர்களில், 11 பேர் இந்திய அணிக்காக விøளாட உள்ளனர். 

இலங்கையின் சங்ககரா (கந்துரதா மரோன்ஸ்), நுவன் குலசேகரா (கந்துரதா மரோன்ஸ்), ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாக் (பெர்த்), தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக் (லயன்ஸ்) ஆகியோர் மட்டும், உள்ளூர் அணிக்கு விளையாட முடிவு செய்துள்ளார்.

இரண்டு அணிகளில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்களை, தங்களது அணிக்காக விøளாட தேர்வு செய்யும் இந்திய அணிகள், சாம்பியன்ஸ் லீக் விதிமுறைப்படி, வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ள உள்ளூர் அணிகளுக்கு நஷ்ட ஈடாக, ஒரு வீரருக்கு தலா ரூ. ஒரு கோடி வரை கொடுக்க வேண்டும்.

இந்திய அணிக்காக விளையாடும் வெளிநாட்டு வீரர்கள்:

வெஸ்ட் இண்டீஸ்: டுவைன் பிராவோ (சென்னை), கெவான் கூப்பர் (ராஜஸ்தான்), போலார்டு (மும்பை).

தென் ஆப்ரிக்கா: டுபிளசி (சென்னை), ஆல்பி மார்கல் (சென்னை), கிறிஸ் மோரிஸ் (சென்னை).

ஆஸ்திரேலியா: நாதன் கவுல்டர்-நைல் (மும்பை), மைக்கேல் ஹசி (சென்னை), மிட்சல் ஜான்சன் (மும்பை), ஷேன் வாட்சன் (ராஜஸ்தான்).

இலங்கை: திசாரா பெரேரா (ஐதராபாத்).


சச்சின் பங்கேற்பாரா

பிரிமியர் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த மும்பை அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடுகிறார். கடந்த தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் பங்கேற்கவில்லை. இவர், சமீபத்தில் முடிந்த கரீபியன் பிரிமியர் லீக் தொடரில், 7 போட்டியில் 41 ரன்கள் மட்டும் எடுத்தார். 

மும்பை அணிக்காக மட்டும் விளையாடும் இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா, தனது மனைவியின் பிரசவத்துக்காக இத்தொடரில் பங்கேற்கவில்லை. இதேபோல, ராஜஸ்தான் அணியின் கேப்டன் ராகுல் டிராவிட்டுக்கு, இது கடைசி தொடர்.

0 comments:

Post a Comment