இங்கிலாந்து கவுன்டி அணியில் காம்பிர்



இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில், எசக்ஸ் அணிக்காக விளையாட இந்திய வீரர் கவுதம் காம்பிர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்திய அணியின் துவக்க வீரர் கவுதம் காம்பிர், 31. இதுவரை 54 டெஸ்ட் (4021 ரன்கள்), 147 ஒருநாள் (5238 ரன்கள்), 37 சர்வதேச "டுவென்டி-20' (932 ரன்கள்) போட்டிகளில் விளையாடி உள்ளார். 

சமீபகாலமாக மோசமான "பார்ம்' காரணமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவிக்கிறார். 

இந்நிலையில் இவர், இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட சசக்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

இவர், நியூசிலாந்தின் ஹமிஷ் ரூதர்போர்டுக்கு பதிலாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ரூதர்போர்டு, நியூசிலாந்தில் நடக்கவுள்ள உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க சென்றுவிட்டார்.

இதனையடுத்து காம்பிர், வரும் ஆக., 20ம் தேதி கோல்செஸ்டர் நகரில் நடக்கவுள்ள நார்தாம்ப்டன்ஷயர் அணிக்கு எதிரான கவுன்டி சாம்பியன்ஷிப் டிவிசன்-2 போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து காம்பிர், தனது "டுவிட்டர்' இணைய தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், "ரசிகர்களுக்கு நற்செய்தி, இன்று முதல் மீண்டும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளேன். இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி போட்டியில், சசக்ஸ் அணிக்காக விளையாட உள்ளேன்,' என, தெரிவித்தார்.

இப்போட்டியில் காம்பிர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, திறமையை நிரூபிக்கும் பட்சத்தில், மீண்டும் இந்தியாவுக்காக விரைவில் விளையாடலாம்.

0 comments:

Post a Comment