இந்திய கிரிக்கெட் அணியை பலமாக்கியவர் கங்குலி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலியை விமர்சித்து இருந்தார். 

தற்போது அவர் அதில் இருந்து பல்டி அடித்து கங்குலியை பாராட்டியுள்ளார். இதுகுறித்து ஸ்டீவ்வாக் கூறியதாவது:–

கொல்கத்தா என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது கங்குலி தான். அவர் ஒரு சிறந்த கேப்டன். 

இந்திய அணியை பலமான அணியாக உருவாக்கியவர் ஆவார். கங்குலியும், டோனியும் வித்தியாசமான கேப்டன்கள். ஆனால் இருவருமே சிறந்தவர்கள்.

ஆசஷ் டெஸ்ட் தொடரில் 3–வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி நன்றாகவே ஆடியது. இளம் வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணி சிறப்பான நிலையை அடைய சில காலம் ஆகும். 

0–2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கும். ஆஸ்திரேலிய அணி இனிவரும் 2 டெஸ் டில் வென்று 2–2 என்ற சமநிலையை அடைவது மிகவும் கடினம்.

20 ஓவர் போட்டியின் ஆதிக்கத்தால் டெஸ்ட் போட்டி அழிந்துவிட்டதாக கூறுவதை ஏற்கமுடிய வில்லை. டெஸ்ட் போட்டி உறுதியாகவே இருக்கிறது. தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆசஷ் டெஸ்ட் தொடரை அதிகமான ரசிகர்கள் ரசித்தனர்.

20 ஓவர் போட்டி இளம் வீரர்களுக்கானது. வீரர்களுக்கு நல்ல பணம் கிடைக்கிறது. ரசிகர்களும் விரும்புகிறார்கள். ஆனாலும் டெஸ்ட் போட்டியின் புகழ் மங்கி விட வில்லை.

தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது தெண்டுல்கர் 200–வது டெஸ்டில் விளையாட உள்ளார். அதை மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன். இதை யாராலும் முறியடிப்பது கடினமே.

இவ்வாறு ஸ்டீவ்வாக் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment