மூன்றே பந்தில் ஹீரோ - சச்சின் வியப்பு



விறுவிறுப்பான "டுவென்டி-20' போட்டிகளில் ஒருவர் "பேட்டை' சுழற்றினால், மூன்றே பந்துகளில் "ஹீரோ' அந்துஸ்துக்கு உயர்ந்துவிடலாம்,''என, சச்சின் தெரிவித்தார்.

பெங்களூருவில், கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் 75வது ஆண்டு விழா நடந்தது. இதில் இந்தியாவின் சச்சின், கங்குலி, டிராவிட், கும்ளே, நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லி உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சச்சின் கூறியது: 

கிரிக்கெட்டில் மட்டும் தான் மூன்றுவிதமான போட்டிகள் உண்டு. டெஸ்டில் அடிப்படையான விஷயங்களை பின்பற்ற வேண்டும். 

மற்ற போட்டிகளில் கட்டுப்பாடு கிடையாது. அதிலும், "டுவென்டி-20' போட்டியில் ஒரு வீரர் அதிரடியாக ரன் சேர்த்தால், மூன்று அல்லது நான்கு பந்துகளில் "ஹீரோ' அந்தஸ்து பெறலாம். 

தேர்வு எப்படி: வீரர்கள் தேர்வு என்பது வெறும் புள்ளிவிவரங்களை அடிப்படையாக கொண்டு இருக்கக்கூடாது. உள்ளூர் போட்டிகளில் ரன் மழை பொழியும் சிலர், சர்வதேச போட்டிகளில் சொதப்புவர். 

எனவே, ஒரு வீரரின் செயல்பாட்டை முழுமையாக ஆய்வு செய்தல் அவசியம். ஒருவர் சில போட்டிகளில் ஏமாற்றினாலும், அவருக்கு நெருக்கடியான தருணங்களை சமாளித்து, சர்வதேச அரங்கில் பிரகாசிக்கும் திறன் இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும்.

 இவ்வாறு சச்சின் கூறினார். 

0 comments:

Post a Comment