இங்கிலாந்து வீரர்கள் முட்டாள்கள் - வாருகிறார் வார்ன்

ஓவல் மைதானத்தின் ஆடுகளத்தில் சிறுநீர் கழித்தது மிதமிஞ்சிய முட்டாள்தனமான, திமிர் பிடித்த செயல்,'' என, வார்ன் தெரிவித்தார். 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை, இங்கிலாந்து அணி 3-0 என, கைப்பற்றியது. 

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஷஸ் கோப்பை வென்ற உற்சாகத்தில், இங்கிலாந்து அணியின் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது உற்சாக மிகுதியில் பீட்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன் ஆகியோர், ஓவல் மைதானத்தின் ஆடுகளத்தில் சிறுநீர் கழித்தனர். 

அப்போது, ஆஸ்திரேலிய வீரர்கள், பத்திரிகையாளர்கள் மைதானத்தில் தான் இருந்தனர். 

இதனால், இவ்விஷயம் வெளிப்பட்டு விட்டது. கிரிக்கெட் வீரர்களின் புனித இடமான ஆடுகளத்தை, அசிங்கப்படுத்திய வீரர்களின் செயல் குறித்து, விசாரணை நடக்கிறது. 

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் கூறுகையில்,"" வீரர்களின் கொண்டாட்டம் என்பது "டிரசிங் ரூமிற்குள்' இருப்பது தான் சிறந்தது. 

மிகவும் பழமை வாய்ந்த ஓவல் ஆடுகளத்தில் சிறுநீர் கழித்தது, இங்கிலாந்து வீரர்களில் மிதமிஞ்சிய முட்டாள்தனமான, திமிர் பிடித்த செயல்,'' என்றார்.

0 comments:

Post a Comment