இந்திய பவுலர்களுக்கு மெக்ராத் பயிற்சி



இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு, ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மெக்ராத் பயிற்சி தருவார் என்று தெரிகிறது.

சென்னையில் இளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கான எம்.ஆர்.எப்., பயிற்சி அகாடமி உள்ளது. இதன் இயக்குனராக சமீபத்தில் மெக்ராத் நியமிக்கப்பட்டார்.

இப்போது, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), எம்.ஆர்.எப்., நிறுவனம் இரண்டும் விரைவில் கைகோர்க்கும் எனத் தெரிகிறது. இதன் மூலம், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு, மெக்ராத் பயிற்சி தரலாம்.

இதுகுறித்து எம்.ஆர்.எப்.,ன் பொறுப்பாளர் செந்தில்நாதன் கூறுகையில்,"" பவுலிங் பயிற்சி குறித்த எங்கள் விளக்கங்களை கொடுத்துள்ளோம். ஆனால், ஒப்பந்தம் குறித்து பி.சி.சி.ஐ., தான் முடிவு செய்ய வேண்டும். 

இதுகுறித்து அவர்கள் தரப்பில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. நாங்கள் முடிவெடுக்க குறைந்த நேரமே கொடுத்துள்ளனர். பி.சி.சி.ஐ., மீண்டும் வரும்வரை காத்திருப்போம்,'' என்றார். 

பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கூறுகையில்,"" இந்த ஒப்பந்தம் பவுலிங் பயிற்சி, பவுலிங் அகாடமி பற்றியது மட்டுமல்ல. 

மறுவாழ்வு பயிற்சி மையம் மற்றும் பயிற்சியாளருக்கு பயிற்சி தரும் வசதிகள் குறித்தும் பேசப்படுகிறது. மொத்தத்தில் இது நல்ல ஒப்பந்தம்,'' என்றார்.

0 comments:

Post a Comment