கிரிக்கெட் சூதாட்டம் - டிராவிட் ஆவேசம்



கிரிக்கெட் மீதான நம்பகத்தன்மையை மீட்பது மிகவும் முக்கியம். இல்லையெனில், ரசிகர்களிடம் உள்ள தங்கள் மரியாதையை வீரர்கள் இழக்க நேரிடும்,'' என, டிராவிட் தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட். பிரிமியர் தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக உள்ளார். இவரது அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோர், சூதாட்டத்தில் ஈடுபட்டு பிடிபட்டனர். 

இதுகுறித்து டிராவிட் வேதனையுடன் கூறியது:

கிரிக்கெட் போட்டிக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் கிரிக்கெட் மீது உயிராக உள்ளனர். இவர்கள் தான், நாம் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் என்று முடிவு செய்கின்றனர். 

நிர்வாகிகள் தனியாக உள்ளனர். ஏனெனில், ரசிகர்களும், வீரர்களும் தான் கிரிக்கெட்டை நடத்துகின்றனர். இதனால், இப்போட்டியின் மீது இழந்த நம்பிக்கையை மீண்டும் கொண்டு வர வேண்டும். இதற்கு போர்டு அல்லது அரசு என, யாராக இருந்தாலும் சரி பாகுபாடு பாராமல் உதவ வேண்டும். இது தான் நமக்கு முக்கியம்.


மதிப்பு குறையும்:

பிரிமியர் கிரிக்கெட் சூதாட்டத்துக்குப் பின், தினமும் பத்திரிகையின் முதல் பக்கத்தில் செய்தி வருகிறது. இது கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவாது. இதனால், கிரிக்கெட் வீரர்களின் மீது வைத்துள்ள மரியாதை, அன்பு, மதிப்பு ஆகியவை குறைந்துவிடும். ஒருவேளை இப்படி நடந்தால், இந்தியா போன்ற தேசத்தில் இது மிக, மிக சோகமான செய்தி. 

இவ்வாறு டிராவிட் கூறினார்.

0 comments:

Post a Comment