கபில்தேவ் பயிற்சியாளர் மரணம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவின் பயிற்சியாளர் தேஷ் பிரேம் ஆசாத், மரணம் அடைந்தார்.

இந்தியாவுக்கு முதல் உலக கோப்பை (1983) வென்று தந்தவர் கபில்தேவ். இவருக்கு 1970ல் களில் பயிற்சியாளராக இருந்தவர் தேஷ் பிரேம் ஆசாத், 75. கடந்த 1986 ல் சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியா விருது கிடைத்தது. 

உடல்நலக்குறைவு காரணமாக சண்டிகரில் உள்ள தனியார், ஆஸ்பத்திரியில் 15 நாட்களுக்கு முன் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று ஆசாத் இறந்தார்.

0 comments:

Post a Comment