ஒலிம்பிக் மைதானத்தில் அதிசய தீவு

லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் இன்று வண்ணமயமாக துவங்குகின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு துவக்கவிழா மிகப் பிரமாண்டமாக நடக்க உள்ளது.

பிரிட்டன் தலைநகர் லண்டனில், 30வது ஒலிம்பிக் போட்டி இன்று துவங்குகிறது. இதற்கான வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளை "ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்கு ஆஸ்கர் விருது வென்ற இயக்குனர் டேனி பாயல் தலைமையிலான குழு நடத்துகிறது.

மூன்றரை மணி நேரம் நடக்கும் இந்நிகழ்ச்சிக்கு "அதிசய தீவுகள்' என, பெயரிடப்பட்டுள்ளது. 27 முறை மணி ஓசை ஒலிக்கப்பட்டு, நிகழ்ச்சிகள் துவங்கும்.


வருகிறார் "007':

அடுத்து இங்கிலாந்தின் பல்வேறு துறையில் பிரபலமானவர்களை மைதானத்தில் தோன்ற உள்ளனர். "ஜேம்ஸ்பாண்ட்' டேனியல் கிரெக் என்பவர் நடித்த "தி அரைவல்' என்ற குறும்படம் காண்பிக்கப்படும்.

பி.பி.சி.,யால் தயாரிக்கப்பட்ட இதில், ஜேம்ஸ்பாண்ட் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வந்து, அப்படியே ஒலிம்பிக் மைதானத்துக்கு, பாராசூட்டில் மேலிருந்து கீழே இறங்குகிறார். அப்போது ஹெலிகாப்டருடன் இணைக்கப்பட்ட கயிற்றில் ஒலிம்பிக் ஜோதி எடுத்து வரப்படும்.


உண்மை விலங்குகள்:

பின் "கிரீன் அண்டு பிளசன்ட்' என்ற நிகழ்ச்சி துவங்குகிறது. இதில் பிரிட்டனின் பசுமையான கிராமப்புறமாக போல் மைதானம் மாறும். இதில் உண்மையான குதிரைகள், ஆடுகள், வாத்துகள், மாடுகள் பங்கேற்கும்.


பாரம்பரிய நிகழ்ச்சி:

இதன்பின், இங்கிலாந்தின் வரலாறு குறித்து, மைதானத்தில் விரிவாக காண்பிக்கப்பட உள்ளது. அப்போது நூற்றுக்கணக்கில் வீரர்கள் அரங்கில் தோன்றுவர். இங்கிலாந்தில் நடந்த தொழிற்புரட்சியை நினைவுபடுத்தும் வகையில், "சிம்னி' விளக்குகளுடன் தோன்றுவர்.


வீரர்கள் அணிவகுப்பு:

இதையடுத்து, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் நாடுகளில் அகர வரிசைப்படி, மைதானத்தில் அணி வகுத்து வருவர். இதில் முதல் அணியாக கிரீசும், கடைசியில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து வீரர்களும் வருவர்.


உறுதி மொழி:

பின், லண்டன் ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டியின் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் செபாஸ்டியன் கோ, அடுத்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஜாக்ஸ் ரோகி என, இருவரும் துவக்க உரை ஆற்றுவர்.

அடுத்து ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டு, ஒலிம்பிக் கீதம் இசைக்கப்படும். பின், போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொள்வர். பின் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படும். இது ஒலிம்பிக் போட்டி முடியும் வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கும். தொடர்ந்து வாண வேடிக்கையுடன் துவக்க விழா நிறைவு பெறும்.

0 comments:

Post a Comment