இலங்கை டூர்: இந்திய அணி நாளை தேர்வு

இந்திய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு 20&20 ஆட்டத்தில் விளையாடுகிறது.

முதல் ஒருநாள் போட்டி 21&ம் தேதியும், 2வது ஆட்டம் 24&ம் தேதியும், 3வது ஆட்டம் 28&ம் தேதியும், 4வது ஆட்டம் 31&ம் தேதியும், கடைசி ஒன்டே 4&ம் தேதியும் நடக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு மும்பையில் நாளை நடக்கிறது. சச்சினுக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்படலாம் என தெரிகிறது.

சேவாக் அணிக்கு மீண்டும் திரும்புகிறார். இளம்வீரர் ரகானேவிற்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படலாம்.

சமீபகாலமாக சுழற்பந்துவீச்சாளர் சரியாக அமையாததால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அஸ்வின் அதிக ரன்னை வாரி வழங்குவது பின்னடைவாக இருந்து வருகிறது.

இங்கிலாந்து மற்றும் ஆஸி. டூரிலும் சொதப்பினார். மேலும் ஐபிஎல்லிலும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை.

இதனால் அஸ்வின் நீக்கப்படக்கூடும். ராகுல்சர்மா, ஓஜா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில் ரவீந்திர ஜடேஜாவுக்கும் சிக்கல் இருக்கிறது. வேகப்பந்து வீச்சில் புதுமுக வீரர்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.

0 comments:

Post a Comment