கபில்தேவ் மீதான தடையை நீக்கியது பி.சி.சி.ஐ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மீதான தடையை நீக்கி அவருக்கு பிசிசிஐ மன்னிப்பு வழங்கியது. இதன்மூலம் அவர் கிரிக்கெட் வாரியம் மூலம் ரூ.1.5 கோடி வரையிலான சலுகைகள் பெற வாய்ப்பு உள்ளது.

முதல் முறையாக உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கிய கபில்தேவ், ஓய்வு பெற்ற பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் அவருக்க உயர் பொறுப்பு வழங்கி கவுரவித்தது.

இந்நிலையில் ஐ.பி.எல் போட்டி தொடங்கப்பபட்டபோது, அதற்கு எதிராக ஐ.சி.எல் போட்டி தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக கபில் தேவ் செயல்பட்டதுடன், பிசிசிஐ.க்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.

இதனையடுத்து அவர் பிசிசிஐ.யின் பதவி வகிக்கவும், வாரியத்தின் உயர்மட்டக்குழு கூட்டத்திலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதனால் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளும் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், ஐ.சி.எல் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாகவும், தன் மீதான தடையை நீக்கும்படியும் பிசிசிஐ.க்கு கபில்தேவ் கடிதம் எழுதினார்.

இன்று பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் பிசிசிஐ தலைவர் சீனிவாசனை சந்தித்தார். அப்போது ஐசிஎல் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்காக கடித நகலையும் ஒப்படைத்தார்.

இதையடுத்து அவர் மீதான தடையை நீக்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஐசில் தலைவர் பதவியிலிருந்து விலகுவதுடன், பிசிசிஐக்கு எப்போதும் ஆதரவாக இருப்பதாகவும் கடிதத்தில் கூறியதால் அவர் மீதான தடை நீக்கப்படுவதாக சீனிவாசன் தெரிவித்தார்.

தற்போது தடை நீங்கியதன்மூலம் கபில்தேவுக்கு மீண்டும் பிசிசிஐ உயர் பொறுப்புகள் கிடைக்கவும், ரூ.1.5 கோடி வரையலின சலுகைகளும் மீண்டும் கிடைக்க வாய்ப்பு உள்ளது

1 comments: