தப்புகிறாரா போதை ராகுல் சர்மா?

போதை மருந்து பயன்படுத்திய ராகுல் சர்மா மீது, நடவடிக்கை எடுப்பதில் அவசரம் காட்டப் போவதில்லை. போலீஸ் அறிக்கை குறித்து தீவிரமாக ஆராய்ந்த பின்னரே முடிவு செய்யப்படும்,'' என, ஐ.பி.எல்., தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்தார்.

பஞ்சாப்பை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சர்மா, 25. ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய ராகுல் சர்மா, மே 20ம் தேதி மும்பை ஓட்டலில் நடந்த "பார்ட்டி'யில் சக வீரர் பார்னலுடன் (தென் ஆப்ரிக்கா) கலந்து கொண்டார்.

இதில் பங்கேற்றவர்கள் போதை மருந்து பயன்படுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நடந்த "ரெய்டில்' ராகுல் சர்மா, பார்னல் உட்பட 90 பேர் பிடிபட்டனர். இவர்களது ரத்தம், சிறுநீர் மாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டனர்.

ராகுல் சர்மா, பார்னல், முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடியின் மகன் அங்கன் பேடி <உட்பட 42 பேர், "கேனபிஸ்', "கோகெய்ன்' என்ற போதை மருந்துகளை பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இவர்களை விரைவில் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ஐ.பி.எல்., தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,"" சம்பவம் நடந்து இத்தனை நாளைக்குப் பின் தான் அறிக்கை வெளிவந்துள்ளது. ராகுல் சர்மா குறித்து போலீசார் தரும் அறிக்கையை முழுமையாக படித்துப் பார்த்து, நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும்,'' என்றார்.
அணியில் இடமில்லை

போதை மருந்து பயன்படுத்தி சிக்கியுள்ள சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சர்மா, தற்போது இலங்கை சென்றுள்ள இந்திய அணியில் இடம் பெற்றார். நேற்று நடந்த முதல் போட்டியில், களமிறங்கிய 11 பேர் கொண்ட அணியில் இவர் சேர்க்கப்படவில்லை.

0 comments:

Post a Comment