டிராவிட் இடத்தை நிரப்புவது கடினம் - தெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் “தூண்” என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு பிறகு அணியில் இருந்து ஓய்வு பெற்றார். டெஸ்டில் 3-வது வீரராக களம் இறங்கி அணியை தூக்கி நிறுத்துவதில் அவர் சிறந்தவர்.

டிராவிட் ஓய்வுக்கு பிறகு இந்திய அணி டெஸ்டில் விளையாடவில்லை. இந்த நிலையில் டிராவிட் இடத்தை நிரப்புவது கடினம் என்று உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான தெண்டுல்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்தியா மற்றும் உலக கிரிக்கெட்டில் வியக்கத்தக்க வீரர் ராகுல் டிராவிட் ஆவார்.

அவரது இடத்தை நிரப்புவது கடினம். அர்ப்பணிப்பு திறனோடு விளையாடக் கூடியவரால் மட்டும் அந்த இடத்துக்கு வரமுடியும்.

டெஸ்டில் 3-வது வீரராக விளையாடுவது என்பது சவாலானது. அவர் நீண்ட காலமாக அந்த வரிசையில் சிறப்பாக ஆடினார்.

எல்லா சிறந்த வீரர்களும் ஒருநாள் ஓய்வு பெற்றாகத்தான் வேண்டும். ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு உள்ளூர் போட்டிகளின் அமைப்பு முறை சரியானது இல்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டு சரியானது இல்லை.

ஏனென்றால் இதே நிலையில் தான் நாம் டெஸ்டில் “நம்பர் 1” இடத்தை பிடித்தோம்.

இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment