மோர்னே மோர்கல் நீக்கப்பட்டது ஏன்?

தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீரர் மோர்னே மோர்கல். இந்த ஐ.பி.எல். போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக அவர் இருக்கிறார். அவர் 16 ஆட்டத்தில் 25 விக்கெட் எடுத்து உள்ளார்.

சென்னை அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நேற்று நடந்த மிக முக்கியமான போட்டியில் டெல்லி அணி வீரரான மோர்னே மோர்கல் ஆடவில்லை. 11 பேர் கொண்ட அணியில் அவர் இடம்பெறாதது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

ஏனென்றால் இந்த ஐ.பி.எல். போட்டியில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் அவர்தான் முதல் இடத்தில் உள்ளார். டெல்லி அணி நிர்வாகிகள் மோர்னே மோர்கலுக்கு லேசான காய்ச்சல் என்பதால் ஆடவில்லை என்றனர். ஆனால் அது உண்மையில்லை என்பது தெரியவந்தது. அவர் நீக்கப்பட்டு இருக்கிறார்.

ஆல்ரவுண்டர் இர்பான் பதான் காயம் காரணமாக விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஆல்ரவுண்டர் வரிசையில் உள்ள ஒரு வீரர் அணிக்கு தேவைப்பட்டது.

வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஆந்த்ரே ரஸ்சல் ஆல்ரவுண்டர் வரிசையில் உள்ளதால் அவர் சேர்க்கப்பட்டார். வெளிநாட்டு வீரர்களில் 4 பேர்தான் இடம் பெறமுடியும் என்பதால் மோர்னே மோர்கல் நீக்கப்பட்டார்.

வார்னர், ஜெயவர்த்தனே, ராஸ் டெய்லர், ரஸ்ஸல் ஆகிய 4 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றனர். அணி சமபலத்துடன் இருப்பதற்கான மோர்னே மோர்கல் நீக்கப்பட்டார். ஆனால் அவர் நீக்கப்பட்டதால் அதற்கான பலனை டெல்லி அணி அனுபவித்து விட்டது. அவர் இருந்து இருந்தால் சென்னை அணி 222 ரன் குவித்து இருக்க இயலாது.

மோர்னே மோர்கல் விஷயத்தில் மட்டும் கேப்டன் ஷேவாக் தவறு செய்யவில்லை. ‘டாஸ்’ வென்ற அவர் முதலில் பேட்டிங் செய்யாமல் பீல்டிங்கை தேர்வு செய்ததும் தவறான முடிவே.

முதலில் சென்னை அணி ஆடியதால் மிகப்பெரிய ரன்னை (222) குவித்து விட்டது. இதனால் டெல்லி அணியால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. எலிமினேட்டரில் ஹர்பஜன்சிங் ‘டாஸ்’ வென்று சென்னையை முதலில் ஆட அழைத்தார். அவர் செய்த அதே தவறை நேற்று ஷேவாக் செய்தார். இதனால் இறுதிப் போட்டி வாய்ப்பை டெல்லி அணி இழந்தது.

மேலும் அவர் தொடக்க வீரராக ஆட வராமல் 3-வது வீரராக வந்ததும் தவறே. ‘லீக்’ ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடித்த டெல்லி அணி ‘பிளே ஆப்’களில் மோசமாக ஆடி இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது.

0 comments:

Post a Comment