ஐ.பி.எல். போட்டியில் ரூ.180 கோடிக்கு டிக்கெட் விற்பனை

ஐ.பி.எல். போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ரூ.10 கோடி பரிசாக கிடைத்தது. ஐ.பி.எல். கோப்பையை வென்றதால் அதிக லாபம் அடையும் அணியாக கொல்கத்தா இருக்கும்.

அந்த அணி இந்த ஆண்டு ரூ.100 கோடி வரை செலவழித்து உள்ளது. கேப்டன் காம்பீர், காலிஸ், சுனில் நரீன், யூசுப்பதான் ஆகிய 4 வீரர்களுக்கு மட்டுமே ரூ.50 கோடி வரை செலவழித்து உள்ளது. இந்த செலவழித்த தொகைக்கு பல மடங்கு லாபம் வரும் என்று கருதப்படுகிறது.

சாம்பியன் என்பதால் அடுத்த ஆண்டு அந்த அணியின் ஸ்பான்சர் தொகை எல்லாம் அதிகமாக இருக்கும். டிக்கெட் விற்பனை மற்றும் 18 ஸ்பான்சர்கள் மூலம் அந்த அணிக்கு வரு மானம் கிடைக்கிறது.

இந்த ஐ.பி.எல். போட்டியில் பல்வேறு சர்ச்சைகள் நிகழ்ந்தாலும் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. ஸ்பாட் பிக்சிங், பாலியல் விவகாரம், ஷாருக்கான் விவகாரம், போதை விருந்தில் ஐ.பி.எல். வீரர்கள் 2 பேர் பங்கேற்று கைதானது ஆகியவற்றால் இந்த ஐ.பி.எல். போட்டியில் மிகுந்த சர்ச்சை ஏற்பட்டது.

ஆனால் எந்தவித சர்ச்சையாலும் ஐ.பி.எல். ஆட்டத்துக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இந்தப் போட்டியை டெலி விசன் மூலம் 16 கோடி பேர் பார்த்ததாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மொத்தம் 20 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுள்ளன. விற்பனையான டிக்கெட்டுகளில் மொத்த மதிப்பு ரூ.180 கோடியாகும்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஐ.பி.எல்.-ன் பிராண்ட் மதிப்பு அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டின் பிராண்ட் மதிப்பு ரூ.18,350 கோடியாகும்.

1 comments: