ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் ரூ.200 கோடிக்கு சூதாட்டம்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல். போட்டியையொட்டி மிகப்பெரிய அளவில் ‘பெட்டிங்‘ நடைபெற்று வருகிறது. எந்த அணி வெற்றி பெறும், யார் அதிக ரன் எடுப்பார், யார் அதிக விக்கெட் கைப்பற்றுவார், அதிக சிக்சர் யார் அடிப்பார் என்ற அளவில் ‘பெட்டிங்’ நடைபெறும்.

இன்று இறுதிப் போட்டி என்பதால் ‘பெட்டிங்’ மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப் போட்டி அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் ரூ.200 கோடிக்கு சூதாட்டம் நடைபெறலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சூதாட்டத்தை தடுக்கும் வகையில் சென்னை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக சிறப்பு படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தனியார் கிளப்புகள், நட்சத்திர ஓட்டல்களை சிறப்பு படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

டெல்லியை சேர்ந்த முக்கிய சூதாட்ட தரகர்கள் 15 பேர் சென்னை வந்து உள்ளதாகவும் அவர்கள் நட்சத்திர ஓட்டல்களில் தங்கி இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சூதாட்ட தரகர்கள் ஓட்டல்கள், கிளப்புகளில் இருந்து தங்கள் பணியை செயலாற்றுவார்கள் என்று தெரிகிறது. இதனால் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். வீரர்களை யாரும் நெருங்காத வகையில் ஏற்கனவே போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

ஆட்டத்தின் கடைசி பந்து வரை ஸ்பாட் பிக்சிங்கோ மற்றும் பந்து வாரியாக பெட்டிங் நடைபெறுவதை தடுக்கும் விதமாக சிறப்பு குழு தீவிரமாக கண்காணிக்கும்.

0 comments:

Post a Comment