சச்சின் பேட்டை ஏலத்துக்கு அளித்தார் பிரிட்டிஷ் பிரதமர்

சச்சின் டெண்டுல்கர் கையெழுத்திட்ட பேட்டை ஏலத்தில் விடுவதற்காக கொடுத்துள்ளார் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன்.


ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் கிரிக்கெட் மைதானம் அமைக்க நிதி திரட்டுவதற்காக, அந்த பேட்டை ஏலத்தில் விட கொடுத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தான் பாதுகாப்பாக வைத்திருந்த முக்கியப் பொருள்களில் சச்சினின் பேட்டும் ஒன்று. 2010-ம் ஆண்டில் இந்தியா வந்தபோது அந்த பேட் எனக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஏலத்தில் அந்த பேட் சுமார் 3 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக டெய்லி டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

0 comments:

Post a Comment