ஒரு சதம்-57 சிக்சர்: ஐ.பி.எல். ஹீரோ கெய்ல்

20 ஓவர் ஐ.பி.எல். போட்டி என்றாலே சிக்சர்கள், பவுண்டரிகள் மழை பொழியும். பேட்ஸ் மேன்களுக்கு ஆட்டம் பிடித்து விட்டதால் அடிப்பதெல்லாம் சிக்சர்கள், பவுண்டரிகளாக பறக்கும். அதேபோல் நேற்று டெல்லி அணிக்கு எதிரான நடந்த போட்டியில் பெங்களூர் அணி வீரர் கெய்ல் சிக்சர்களாக விளாசினார்.

நின்ற இடத்தில் இருந்து சிக்சர்களை தூக்கினார். 14-வது ஓவரில் இர்பான் பந்தில் 2 தொடர் சிக்சரும், 16-வது ஓவரில் நெகி பந்தில் 3 தொடர் சிக்சரும் விளாசியது இந்த ஐ.பி.எல். போட்டியின் சிறப்பம்சம் ஆகும்.

நேற்றைய போட்டியில் மட்டும் கெய்ல் 13 சிக்சர்கள் அடித்தார். இடையில் அவ்வப்போது பவுண்டரிகளும் பறந்தது. 62 பந்துகளில் 7 பவுண்டரி, 13 சிக்சர்களுடன் 128 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இந்த ஐ.பி.எல். போட்டியில் ஏற்கனவே 13 போட்டிகளில் கெய்ல் 44 சிக்சர்கள் குவித்து இருந்தார். நேற்று எடுத்த 13 சிக்சர்களும் சேர்த்து 57 சிக்சர்களுடன் ஐ.பி.எல். போட்டியில் அதிக சிக்சர் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து ஹீரோவாக திகழ்கிறார்.

நேற்று ஐ.பி.எல். போட்டியில் தனது முதலாவது சதத்தையும் எட்டினார். இது ஐ.பி.எல். போட்டியின் 5-வது சதம் ஆகும். ஏற்கனவே டேவிட் வார்னர் (டெல்லி), கெவின் பீட்டர்சன் (டெல்லி), ரோகித்சர்மா (மும்பை), ரஹானே (ராஜஸ்தான்) ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.

கெய்ல் வெஸ்ட் இண்டீசை சேர்ந்தவர். உலக கோப்பை போட்டியின் போது தன் நாட்டு அணிக்கு அவர் சரியாக ஆடவில்லை என்று குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதனால் அவருக்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஐ.பி.எல். ஏலத்தில் அவரை பெங்களூர் அணி விலைக்கு வாங்கியது. ஐ.பி.எல். போட்டியில் அபாரமாக விளையாடி வருகிறார். பெங்களூர் அணியின் வெற்றிக்கு அவரது ஆட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.

0 comments:

Post a Comment