இந்தியாவின் தங்க மகன் சச்சின்

இந்தியாவின் தங்க மகன் சச்சின் டெண்டுல்கர் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புகழாரம் சூட்டியுள்ளார்.


கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு, மேற்கு வங்க மாநிலம் சார்பில் சச்சினுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்த சாதனைக்காக சச்சின் அப்போது கெüரவிக்கப்பட்டார்.

அப்போது மம்தா பேசியது: சச்சின் இந்தியாவின் தங்க மகன், எனவேதான் அவருக்கு தங்கத்தினால் ஆன கிரிக்கெட் பேட், பந்தை எங்கள் மாநிலம் சார்பில் பரிசாக அளித்துள்ளோம். உங்கள் சாதனைக்காக நாங்கள் தலைவணங்குகிறோம். உங்களால் அனைவருமே பெருமையடைந்துள்ளோம் என்று மம்தா பேசினார்.

பாராட்டை ஏற்றுப் பேசிய சச்சின், "உங்கள் அனைவரது ஆதரவுக்கும் நன்றி. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பலமுறை விளையாடியுள்ளேன். அவை மகிழ்ச்சிகரமான அனுபவம். இப்போது இந்த பாராட்டு விழாவும் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துள்ளது. எனக்கும், இந்திய கிரிக்கெட் அணிக்கும் கொல்கத்தா மக்கள் எப்போதும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

முன்னதாக தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட பேட், பந்தை சச்சினுக்கு மம்தா வழங்கினார். மேற்குவங்கத்தில் பிரபலமான இனிப்பு வகையான ரசகுல்லா (100 எண்ணிக்கை) சச்சினுக்கு வழங்கப்பட்டது.

மேற்குவங்க கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜக்மோகன் டால்மியா உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

0 comments:

Post a Comment