IPL : இணையதள ரசிகர்கள் அதிகரிப்பு

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடர் "டுவென்டி-20' போட்டிகளை, இணைதளத்தில் பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை 56 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஐ.பி.எல்., போட்டிகளை "டிவி'யில் பார்க்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக வருத்தப்படுகின்றனர் நிர்வாகிகள்.

ஆனால், இணையதளத்தில் பார்ப்பவர்கள் எண்ணிக்கை, சரிபாதிக்கும் மேலாக அதாவது 56 சதவீதம் உயர்ந்துள்ளது பெரும் வியப்பாக உள்ளது.

துவக்கவிழா உட்பட இதுவரை நடந்த போட்டிகளை 1.37 கோடி பேர் வரை இணைதளத்தில் பார்த்துள்ளனராம். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 88 லட்சமாகத்தான் இருந்துள்ளது.


டில்லி முதலிடம்:

இதில் பெங்களூரு, டில்லி நகரங்களில் மட்டும் 14 சதவீதத்தில் கண்டு களித்தனர். இரண்டாவது இடத்தில் மும்பை (13 சதவீதம்) வருகிறது. கடந்த ஏப். 10ல் நடந்த பெங்களூரு-கோல்கட்டா இடையிலான போட்டியை மட்டும் அதிகப்படியாக 21.5 லட்சம் பேர் இணையதளத்தில் பார்த்தனர்.


மொபைலும் ஆதிக்கம்:

இதுதவிர, 60 ஆயிரம் பேர் தங்கள் மொபைல் போனில் ஐ.பி.எல்., போட்டியை கண்டுகளிக்கின்றனர். இது கடந்த ஆண்டு எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாம்.

இதுகுறித்து கூகுள் இந்தியாவின் மீடியா சேல்ஸ் தலைவர் பிரவீண் சர்மா கூறுகையில்,"" ஐ.பி.எல்., போட்டிகளை இணைதளத்தில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தொடந்து அதிகரித்து வருகிறது. இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி தருகிறது,'' என்றார்.

1 comments: