கங்குலியின் ஒன்றரை மணி நேர "மீட்டிங்'

புனே வாரியர்ஸ் அணி கேப்டன் கங்குலி, வீரர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் (மீட்டிங்) ஒன்றரை மணி நேரம் நடந்ததாம்.

"டுவென்டி-20' போட்டிகளைப் பொறுத்தவரையில், 20 ஓவர்கள் பவுலிங் செய்யவே ஒன்றரை மணி நேரம் தான் தேவைப்படும். ஆனால், 15 நிமிடத்தில் முடிய வேண்டிய ஆலோசனைக் கூட்டமும், இவ்வளவு நேரம் நடந்துள்ளது.

முதல் போட்டியில் மும்பை அணிக்கு அதிர்ச்சி தந்த இந்த அணி, கடந்த 8ம் தேதி முதன் முதலாக, பஞ்சாப் அணியை எதிர்த்து சொந்த மண்ணில் களமிறங்கியது. இதனிடையே, கங்குலி, இதற்கு முன் கோல்கட்டா அணியின் கேப்டனாக இருந்த போது வெளிநாட்டு பயிற்சியாளர், வீரர்களுடன் பல்வேறு வழிகளில் பிரச்னை ஏற்பட்டது. புனே அணியிலும் இதுபோல ஏற்பட்டுவிடக் கூடாது என்று, முன்னெச்சரிக்கையாக களமிறங்கினார் இவர்.

இதன்படி, விளையாடும் லெவனில் யாரை சேர்க்கலாம், யாரை நீக்கலாம் என முடிவு செய்ய கூட்டம் நடத்தினார் கேப்டன் மற்றும் ஆலோசகர் கங்குலி. இதில் பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர்கள் பிரவீண் ஆம்ரே, ஆலன் டொனால்டு மற்றும் அணியில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் பங்கேற்றனர்.


கண்டிப்பான "ஆர்டர்':

பொதுவாக 15 நிமிடங்களுக்கும் மேல், இதுபோன்ற கூட்டங்கள் நீடிக்காது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக, ஒன்றரை மணி தீவிர விவாதம் நடந்துள்ளது. இதில் எந்தெந்த வெளிநாட்டு வீரர்களை அணியில் சேர்க்கலாம் என ஆலோசித்தனர். ரைடர், அல்போன்சா தாமஸ், பார்னல் ஆகியோருக்கு பிரச்னையில்லை.

அதேநேரம் மாத்யூஸ் புதியதாக வந்துள்ளார். இதனால் அணியின் யாருக்கும் கருணை காட்டப்பட மாட்டாது. அணியின் நலன் கருதி யார் வேண்டுமானாலும் சேர்க்கப்படலாம் என்று கங்குலி தெளிவாக கூறியதாக தெரிகிறது.


பெரும் தலைவலி:

இதுகுறித்து கங்குலி கூறுகையில்,"" ஒவ்வொரு போட்டிக்கும் நான்கு வெளிநாட்டு வீரர்கள் தான் இடம் பெற வேண்டும் என்பது கட்டுப்பாடு. இதன் படி யாரை தேர்வு செய்வது என்பதில் கேப்டனுக்கு தலைவலியே வந்து விடுகிறது,'' என்றார்.

0 comments:

Post a Comment