"சூப்பர்' சிக்சருக்கு ரூ. 5 லட்சம்

ஐ.பி.எல்., "சூப்பர்' சிக்சஸ்' போட்டியில் மிக நீண்ட தூரத்துக்கு சிக்சர் அடிக்கும் வீரருக்கு, ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது.

ஐ.பி.எல்., போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது, அதிக சிக்சர் அடித்த வீரர் விருது, "சூப்பர் கேட்ச்' பிடித்த விருது என, வீரர்கள் ஏற்கனவே பரிசு மழையில் நனைந்து கொண்டுள்ளனர். இப்போது புதிதாக "சூப்பர் சிக்சஸ்' என்ற போட்டி நடத்தப்படுகிறது.

இதன்படி, தேர்வு செய்யப்பட்ட 5 நாட்களில் போட்டி நடக்கும். ஒவ்வொரு அணிகளும் தலா 3 வீரர்களை இதில் பங்கேற்கச் செய்யலாம். வழக்கமான ஆடுகளத்தில், "பவுலிங் மெஷின்' உதவியுடன் 12 பந்துகளில் வீசப்படும்.

இதை எந்த வீரர் அதிக தூரத்துக்கு சிக்சர் அடிக்கின்றாரோ, அவருக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும். மொத்தம் 5 நாட்கள் நடக்கும் இப்போட்டியில், முதலிடம் பெறும் வீரருக்கு வீரருக்கு, மே 27ல் ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.


யூசுப் ஏமாற்றம்:

கோல்கட்டா, பஞ்சாப் இடையிலான ஆட்டத்தின் (ஏப். 15) முடிவில், முதல் "சூப்பர் சிக்சஸ்' போட்டி நடந்தது. இதில் பஞ்சாப் வீரர் டேவிட் மில்லர், 83 மீ., தூரத்துக்கு சிக்சர் அடித்து ரூ. 1 லட்சத்தை தட்டிச் சென்றார். கோல்கட்டாவின் யூசுப் பதான் 78 மீ., தூரம் தான் அடித்தார்.

மீதமுள்ள போட்டிகள், வரும் ஏப். 24 (புனே-டில்லி), மே 6 (மும்பை-சென்னை), மே 20ம் (டெக்கான்-பெங்களூரு) தேதி நடக்கும். மே 13 ல் ராஜஸ்தான் வீரர்கள் மட்டும் பங்கேற்கும் போட்டி நடக்கும்.

0 comments:

Post a Comment