சிக்சர் விளாசியதில் மூக்கு அவுட்

தான் சிக்சர் அடித்த பந்து பட்டு மூக்குடைந்த சிறுமியை, ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்து ஆறுதல் கூறினார் கெய்ல்.

சின்னச்சாமி மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு அணி, புனேயை வீழ்த்தியது. இதில், ராகுல் சர்மா ஓவரில் 5 சிக்சர் விளாசினார் பெங்களூரு அணி வீரர் கெய்ல்.

அதில் ஒரு சிக்சர் மைதானத்தில் அமர்ந்திருந்த சிறுமி டியா பாட்யாவின், 11, மூக்கில் பட்டு ரத்தம் கொட்டியது.

"ஸ்கேன்' செய்ததில் மூக்கில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. உடனடியாக "ஆப்பரேஷன்' செய்யப்பட்டது.

நேற்று இந்த சிறுமியை கெய்ல், நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அந்த சிறுமி கெய்லிடம்,"" எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லை.

நீங்கள் தொடர்ந்து பந்துகளை சிக்சராக அடியுங்கள்,'' என்றார்.

இதுகுறித்து கெய்ல் கூறுகையில்,"" சிறுமி பாட்யாவை சந்தித்தது நெகிழ்ச்சியான தருணம். விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,'' என்றார்.

0 comments:

Post a Comment