கங்குலி இப்போதும் சிறந்த கேப்டன் தான்

கடந்த ஐ.பி.எல். போட்டியில் 9-வது இடத்தை பிடித்த புனே வாரியர்ஸ் அணியின் தொடக்கமே சிறப்பாக அமைந்தது. கங்குலி தலைமையிலான புனே வாரியர்ஸ் முதல் ஆட்டத்தில் ஹர்பஜன்சிங் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை 28 ரன்னில் அதிர்ச்சிகரமாக தோற்கடித்தது.

முதலில் ஆடிய புனே வாரியர்ஸ் 9 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்தது. ஸ்டீவன் சுமித் 39 ரன்னும், உத்தப்பா 36 ரன்னும் எடுத்தனர். மலிங்கா, முனாப் பட்டேல் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் இழப்புக்கு 101 ரன்னே எடுத்தது. தினேஷ் கார்த்திக், பிராங்ளின் தலா 32 ரன் எடுத்தனர். அசோக் திண்டா 4 விக்கெட்டும், முரளி கார்த்திக் 2 விக்கெட் டும் எடுத்தனர்.

மும்பை அணியின் தோல்வி குறித்து கேப்டன் ஹர்பஜன்சிங் கூறியதாவது:-

கங்குலி தான் இன்னும் சிறந்த கேப்டன் என்பதை நிரூபித்து இருக்கிறார். அவரது அணியில் சிறந்த மேட்ச் வின்னர்கள் இல்லை என்றாலும் வீரர்களின் திறமையை கண்டறிந்து அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

சுழற்பந்து வீரர்களை அவர் சரியான முறையில் பந்துவீச்சில் பயன்படுத்தினார். நாங்கள் சிறப்பாக வீசி 129 ரன்னுக்குள் புனே அணியை கட்டுப்படுத்தினோம். இந்த ரன் எடுக்க கூடிய இலக்காகும். எங்களது பேட்டிங் தொடக்கத்தில் சிறப்பாக இல்லை. 2 ஓவரில் 3 விக்கெட் விழுந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

வெற்றி குறித்து கங்குலி கருத்து தெரிவித்தார். அவர் கூறும்போது, இந்திய அணியின் கேப்டன் பதவியை பெறும் திறமை ஹர்பஜன்சிங்கிடம் உள்ளது. சாம்பியன் `லீக்' போட்டியிலும் நேற்றைய ஆட்டத்திலும் அவரது கேப்டன் ஷிப் பிரமாதமாக இருந்தது என்றார்.

0 comments:

Post a Comment