கேப்டன் தோனிக்கு காயமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனிக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தியை, அணி நிர்வாகம் மறுத்துள்ளது.

ஐந்தாவது ஐ.பி.எ ல்., தொடரில் "நடப்பு சாம்பியன்' சென்னை அணி, இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில், 2ல் மட்டும் வெற்றி பெற்றது. புனே அணிக்கு எதிராக கடைசியாக நடந்த போட்டியின் போது, கேப்டன் தோனிக்கு தொடையின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் போட்டி முடிந்தவுடன் மனைவி சாக்ஷியுடன் மும்பை சென்றுவிட்டாராம். அங்கு டாக்டரிடம் ஆலோசனை பெற்றுள்ளார்.

இதில், அடுத்து வரும் 3 அல்லது 4 போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என டாக்டர் அறிவுறுத்தியதாக தெரிகிறது. ஏற்கனவே, 2 வெற்றி மட்டும் பெற்று மோசமான நிலையிலுள்ள சென்னை அணிக்கு இந்த செய்தி பெரும் பின்னடைவாக உள்ளது.


ரெய்னா கேப்டனா:

இந்நிலையில் சொந்த மண்ணில் சென்னை அணி, வரும் 19ல் புனே, 21ல் ராஜஸ்தான் அணிகளை எதிர்த்து களமிறங்குகிறது. இதில் வெற்றிபெற்றால் தான், "பிளே ஆப்' சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

ஒருவேளை தோனி பங்கேற்கவில்லை என்றால், ரெய்னா கேப்டன் பொறுப்பை ஏற்கலாம் எனத் தெரிகிறது. 2010 தொடரில் இப்படித்தான் தோனி சில போட்டிகளில் ஓய்வெடுத்த போது, ரெய்னா கேப்டனாக செயல்பட்டார். இதில் சென்னை அணி கோப்பை வென்றது.


நிர்வாகம் மறுப்பு:

தோனி காயம் குறித்து சென்னை அணி நிர்வாகத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில்,"" கடந்த வாரத்தில் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்றதன் காரணமாக, பல வீரர்கள் பயிற்சியில் ஈடுபடவில்லை.

தோனி தனது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவே மும்பை சென்றுள்ளார். மற்றபடி, காயம் குறித்த செய்தி உண்மையில்லை,'' என்றார்.

0 comments:

Post a Comment