போட்டியை ரசித்த யுவராஜ்

புணே-டெக்கான் அணிகள் இடையிலான ஆட்டத்தைப் பார்ப்பதற்காக சுப்ரதா ராய் மைதானத்திற்கு யுவராஜ் சிங் வந்தார்.


நுரையீரல் புற்றுநோய்க்காக அமெரிக்காவில் சிகிச்சையை முடித்துவிட்டு சில நாள்களுக்கு முன்பு இந்தியா திரும்பிய யுவராஜ், திடீரென மைதானத்திற்கு வந்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

நல்ல உத்வேகத்துடன் காணப்பட்ட அவர், முரளி கார்த்திக், ராபின் உத்தப்பா உள்ளிட்ட புணே வீரர்களிடம் சிறிது நேரம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேட்டிங்கும் செய்தார்.

தனது உடல்நலம் குறித்து அவர் கூறுகையில், "இப்போது நலமாக உள்ளேன். நடக்க ஆரம்பித்துள்ளேன். 2 அல்லது 3 மாதங்களில் கிரிக்கெட்டுக்கு திரும்பலாம். அது எனது உடல்நிலையைப் பொறுத்தது. விரைவில் கிரிக்கெட்டுக்கு வருவேன் என்று நம்புகிறேன்.

இங்கு வந்து அணியின் சகவீரர்களை பார்த்தது, சிறிது நேரம் பேட் செய்தது, ரசிகர் கூட்டத்தைப் பார்த்ததில் மகிழ்ச்சியே. இந்த நாள் சிறந்த நாள். நான் குணமடைய வாழ்த்திய அனைவருக்கும் நன்றி' என்றார்.

0 comments:

Post a Comment