பவுலர்களுக்கு எச்சரிக்கை

ஐ.பி.எல்., தொடரில் விதிகளுக்கு புறம்பாக செயல்படும் பவுலர்கள் மீது, அம்பயர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பவுலர்களுக்கான கடும் விதிமுறைகள் கடந்த பிப். 1 முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, போட்டியின் போது பவுலர் பந்தை எறிவதாக அம்பயர் அல்லது "மேட்ச் ரெப்ரி' சந்தேகப்பட்டு தெரிவித்தால், தொடர்ந்து பவுலிங் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்.

இதையடுத்து இந்த விதியை, ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் முழுமையாக கடைபிடிக்குமாறு, அம்பயர்களை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து ஐ.பி.எல்., இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கை விவரம்:

புதிய விதிப்படி பவுலர்கள் பந்துவீசும் முறையில் சந்தேகம் இருந்தால், அம்பயர்கள் <உடனடியாக புகார் தெரிவிக்கலாம். இந்தியாவில் நடந்த உள்ளூர் தொடரின் போது, இம்முறைதான் பின்பற்றப்பட்டது.

போட்டிகளின் போது அம்பயர்கள் நேரடியாக அல்லது "டிவி' ஒளிபரப்பின் மூலம் மற்றும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பவுலர்கள் நடவடிக்கையை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவேளை விதி 24.2ன் படி பவுலர் பந்தை எறிவதாக அம்பயர் அல்லது "மேட்ச் ரெப்ரி' தெரிவித்தால்,போட்டியில் விதிக்கு புறம்பாக செயல்பட்டதாக, பிரிவு 2 ன் விதி நடைமுறைப் படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.புதிய கிரிக்கெட் விதிப்படி ஒரே போட்டியில் மூன்றாவது முறையாக, பந்தை எறிவதை அம்பயர் உறுதி செய்தால், அந்த பவுலர் தொடர்ந்து பவுலிங் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்.

1 comments: