டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ற கேப்டனாக தோனி இல்லை

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் இந்நாள் எம்.பி.யுமான அசாருதின் எம்.பி.க்களின் கிரிக்கெட் போட்டிக்காக தர்மசாலா வந்தார். அப்போது அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தற்போதைய இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி ஒரு நாள் மற்றும் 20-20 போட்டிகளுக்கு தகுதியான நபர் ஆவார். ஆனால் டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் தகுதி வாய்ந்த கேப்டனாக இல்லை. இதில் அவர் இன்னும் தேர்ச்சி பெற வேண்டும்.

என்னை பொறுத்தவரை இந்த மூன்று தரப்பு போட்டிகளுக்கும் தனித்தனி கேப்டன்கள் நியமிக்கப்பட வேண்டும்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இந்திய அணியின் சுவர் என வர்ணிக்கப்பட்ட ராகுல் திராவிட் ஓய்வு பெற்றதை அடுத்து, அவருடைய இடத்துக்கு தகுதியான நபர் ரோகித் சர்மா.

அவருக்கு மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

விராத் கோலி வளர்ந்து வரும் வீரராக இருக்கிறார்.

மேலும், சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறிய அவர் ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்த்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment