தோல்விக்கு காரணம் தோனி

புனே அணிக்கு எதிரான போட்டியில் முதலில் இருந்தே தோற்க வேண்டும் என்ற நினைப்பில் தோனி விளையாடியது தெளிவாகத் தெரிந்தது.

* தொடர்ந்து சொதப்பும் முரளி விஜயை வெளியேற்றாமல், பெங்களூருக்கு எதிராக அசத்திய போலிஞ்சருக்கு ஓய்வு கொடுத்தார்.

* முதலில் சென்னை அணி 13வது ஓவரில் 100 ரன்களை எட்டியது. பின், எளிதாக 170 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டிய நிலையில், தோனி மந்தமாக விளையாட, ஸ்கோர் 160ஐ கூட எட்டவில்லை.

* டெக்கான் அணிக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்திய ரவிந்திர ஜடேஜாவுக்கு, ஒரு ஓவர் கூட பவுலிங் தரவில்லை.

* கடைசி ஓவரை வீச, ஆல்பி மார்கல் போன்ற அனுபவ வீரர்கள் இருக்க, சர்வதேச போட்டிகள் எதிலும் பங்கேற்காத, யோ மகேசிடம் பந்தை கொடுத்தது ஏன், என்பது போன்ற கேள்விகளுக்கு தோனி தான் பதில் தரவேண்டும்

0 comments:

Post a Comment