ஐ.பி.எல். கிரிக்கெட்: 89 சிக்சர் அடித்து கெய்ல் முதலிடம்

ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணி வீரர் கிறிஸ் கெய்லின் அதிரடி ஆட்டம் தொடர்கிறது. புனே வாரியாஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது போல பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும் அவர் அதிரடியாக விளையாடினார்.

56 பந்தில் 87 ரன் (8 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். கிறிஸ் கெய்ல் இந்த ஐ.பி.எல். போட்டியில் மட்டுமின்றி ஓட்டு மொத்த ஐ.பி.எல். கணக்குப்படி சிக்சர் அடித்ததில் முன்னிலையில் உள்ளார்.

இந்த ஐ.பி.எல், போட்டியில் 5 ஆட்டத்தில் விளையாடி 19 சிக்சர் அடித்து முன்னிலையில் உள்ளார்.

அவருக்கு அடுத்தப்படியாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பெலிசிஸ் 12 சிக்சரும் (6 ஆட்டம்), டெல்லி வீரர் பீட்டர்சன் 11 சிக்சரும் (11 ஆட்டம்) அடித்துள்ளனர்.

ஒட்டு மொத்த ஐ.பி.எல். கணக்குப்படி கெய்யில் 39 ஆட்டத்தில் 89 சிக்சர் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

கில்கிறிஸ்ட் 84 சிக்சர் அடித்து 2-வது இடத்திலும், ரெய்னா 82 சிக்சர் அடித்து 3-வது இடத்திலும் யூசுப் பதான் 75 சிக்சர் அடித்து 4-வது இடத்திலும், ரோகித் சர்மா 5-வது இடத்திலும் (70 சிக்சர்) உள்ளனர்.

0 comments:

Post a Comment