புது வரலாறு படைக்குமா பஞ்சாப்


ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று புனே வாரியர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 

கடந்த 5 தொடர்களில் பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில் வென்றதில்லை. இம்முறை வெற்றி பெற்று புது வரலாறு படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆறாவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. இன்று புனேயில் நடக்கும் லீக் போட்டியில் கில்கிறிஸ்ட் தலைமையிலான பஞ்சாப் அணி, மாத்யூஸ் தலைமையிலான புனே அணியை எதிர்கொள்கிறது. 

முதல் போட்டியில், ஐதராபாத் அணியிடம் தோல்வியடைந்த சோகத்தில் புனே அணி உள்ளது. 

துவக்கத்தில் ராபின் உத்தப்பா கைகொடுக்கலாம். யுவராஜ் இன்றாவது தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட வேண்டும். 

ராஸ் டெய்லர் எழுச்சி பெற்றால் நல்லது. சாமுவேல்ஸ், கேப்டன் மாத்யூஸ் பொறுப்புணர்ந்து விளையாட வேண்டும். 

கில்கிறிஸ்ட் பலம்: பஞ்சாப் அணியை பொறுத்தவரை கேப்டன் கில்கிறிஸ்ட் தான் மிகப் பெரும் பலம். 

இவர் அதிரடி காட்டினால், எளிதாக வெற்றி பெறலாம். ஷான் மார்ஷ் காயத்தில் இருப்பதால், இப்போட்டியில் பங்கேற்க மாட்டார். 

எனவே, கில்கிறிஸ்ட்டுடன் டேவிட் ஹசி அல்லது பாமர்ஸ்பச் துவக்கம் தர வாய்ப்புண்டு. "மிடில்-ஆர்டரை' கவனித்துக் கொள்ள, அசார் மகமூத், டிமிட்ரி மஸ்கரானஸ் உள்ளனர். 

வேகப்பந்துவீச்சில் ஜொலிக்க ரியான் ஹாரிஸ், மன்பிரீத் கோனி, பிரவீண் குமார் காத்திருக்கின்றனர். அனுபவ பியுஸ் சாவ்லா உள்ளது நம்பிக்கை அளிக்கிறது.

0 comments:

Post a Comment