சென்னை பிளே-ஆப் போட்டிகள் மாற்றமா?


பிரிமியர் கிரிக்கெட் தொடரின் இரண்டு "பிளே-ஆப்' போட்டிகள், சென்னையில் இருந்து மாற்றப்படலாம் எனத்தெரிகிறது.

ஆறாவது பிரிமியர் லீக் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இலங்கையில் நடந்த இறுதிப் போரில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கை வீரர்கள், தமிழகத்தில் விளையாட அரசு எதிர்ப்பு தெரிவித்தது. 

இதையடுத்து, சென்னையில் நடக்கும் லீக் போட்டிகளின் போது, இலங்கை வீரர்களை சேர்க்காமல், மாற்று வீரர்களுடன் அணிகள் களமிறங்குகின்றன. 

ஆனால், லீக் போட்டிகள் முடிந்த பின், வரும் மே 21, 22ம் தேதிகளில் சென்னையில் இரு "பிளே-ஆப்' போட்டிகள் நடக்கவுள்ளன. 

இதில் மலிங்கா போன்ற முக்கியமான வீரர்கள் இல்லாமல் களமிறங்க இயலாது என அணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, "பிளே-ஆப்' போட்டிகளை மாற்றும் திட்டம் இருப்பதாக தெரிகிறது. 

இதுகுறித்து பிரிமியர் கிரிக்கெட் தொடரின் தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,"" அடுத்தகட்ட போட்டிகள் நடக்கும் இடம் குறித்து, நாளை சென்னையில் நடக்கவுள்ள கட்டுப்பாட்டு குழுவில் இறுதி முடிவு செய்யப்படவுள்ளது,'' என்றார்.

0 comments:

Post a Comment