சச்சினுக்கு இடமில்லையா? முன்னாள் வீரர்கள் ஆவேசம்


இங்கிலாந்தின் டிக்கி பேர்டு அறிவித்த கனவு அணியில், சச்சின் சேர்க்கப்படாதது, கிரிக்கெட் அரங்கில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் டிக்கி பேர்டு. தேசிய அணியில் கடைசிவரை இடம் பெறாத இவர், 66 டெஸ்ட் போட்டிகளுக்கு அம்பயராக இருந்தார் . 

தனது 80வது பிறந்த நாளுக்கு 11 சிறந்த வீரர்கள் அடங்கிய தனது டெஸ்ட் கனவு அணியை தேர்வு செய்தார். டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் குவித்த இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் பிராட்மேன், பாண்டிங், வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா உள்ளிட்ட வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. 

இந்தியா சார்பில் கவாஸ்கர் மட்டும் இடம் பெற்றார். மற்றபடி வார்ன், இம்ரான் கான், விவியன் ரிச்சர்ட்ஸ் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டனர். 

இதற்கு முன்னாள் இந்திய வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 


அஜித் வடேகர்

துவக்க வீரராக கவாஸ்கர் தேர்வு சரிதான். ஆனால், சச்சின், பிராட்மேன் மற்றும் வெஸ்ட் இண்டீசின் வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாதது ஆச்சரியம் தருகிறது. சரியான பலமில்லாத இந்த தேர்வு ஒருதலைப் பட்சமானது. இவரது காலத்தில் விளையாடிய தெரிந்த வீரர்களை மட்டும், பேர்டு தேர்வு செய்துள்ளார்.

பிஷன் சிங் பேடி, எரபள்ளி பிரசன்னா, வெங்கட்ராகவன் என, இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் யாரும் இல்லை. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கில்கிறிஸ்ட் இல்லாதது வியப்பு தான். 


சந்து போர்டே

டிக்கி பேர்டின் கிரிக்கெட் அறிவு குறைவாக உள்ளதால் தான், பிராட்மேன், சச்சின் ஆகியோருக்கு அணியில் இடம் இல்லை. பேர்டு சேர்க்காவிட்டாலும், 

இவர்கள் யார் என்பதை புள்ளி விவரங்கள் பேசும். என்னைப் பொறுத்தவரையில் இங்கிலாந்து "மீடியா' தான், இவரை சிறந்த அம்பயர் என்கின்றன. ஆனால், பேர்டு எப்போதும் தப்பான எண்ணம் கொண்டவர்.

0 comments:

Post a Comment