தோனியை சமாளிப்பாரா காம்பிர்?


சென்னையில் இன்று நடக்கும் ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் சென்னை, "நடப்பு சாம்பியன்' கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. 

சென்னை அணிக்கு துவக்க வீரர் மைக்கேல் ஹசி, பேட்டிங்கில் நம்பிக்கை தருகிறார். 

இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 3 அரைசதம் <உட்பட, மொத்தம் 350 ரன்கள் அடித்துள்ளார். தமிழகத்தின் முரளி விஜய் தான் பெரிதும் (8 போட்டி, 122 ரன்) ஏமாற்றுகிறார். 

துவக்க போட்டிகளில் சொதப்பிய "மிடில் ஆர்டர்' ரெய்னா, மீண்டும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவது ஆறுதல். சென்னை வீரர்களில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரராக உள்ள, கேப்டன் தோனி (235 ரன்கள்) இன்றும் அசத்தட்டும். அடுத்து வரும் பத்ரிநாத், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் பொறுப்புணர்ந்து விளையாடினால் நல்லது. 

"ஆல்-ரவுண்டர்' பிராவோ, பவுலிங்கில் 14 விக்கெட் வீழ்த்தினாலும், பேட்டிங்கில் அதிக பந்துகளை வீணடித்து ரசிகர்கள் பொறுமையை சோதிக்கிறார்.


கடைசியில் ஏமாற்றம்:

சென்னை அணியின் பவுலிங், துவக்கத்தில் எல்லாம் நன்றாகத்தான் உள்ளது. ஆனால், கடைசி கட்ட ஓவர்களில் சொதப்புவது தொடர்கிறது. 

ஐதராபாத்துக்கு எதிரான கடந்த போட்டியில், கடைசி 5 ஓவர்களில் 63 ரன்கள் விட்டுக்கொடுத்தது சிக்கலை தந்தது. 

இதற்கேற்ப, மோகித் சர்மா, கிறிஸ் மோரிஸ் இன்று கவனமாக செயல்பட வேண்டும். 

சுழற்பந்து வீச்சாளர்கள் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா ஆகியோரது நம்பிக்கை தொடர்ந்தால் நல்லது. 

0 comments:

Post a Comment