சேப்பாக்கத்தில் 33-வது ஐ.பி.எல். போட்டி


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுவது 33-வது ஐ.பி.எல். போட்டியாகும். இதுவரை நடந்த 32 ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 21 போட்டியில் வெற்றி பெற்றது. 11 ஆட்டத்தில் தோற்றது. 

2011-ம் ஆண்டு சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் தான் மோதிய 8 ஆட்டத்திலும் வென்று சாதனை படைத்து கோப்பையை வென்றது. இங்கு சூப்பர் கிங்ஸ் வீரர் முரளிவிஜய் 2 முறை சதம் அடித்துள்ளார். 

2010-ம் ஆண்டு ராஜஸ்தானுக்கு எதிராக 56 பந்தில் 127 ரன்னும், கடந்த ஆண்டு டெல்லி அணிக்கு எதிராக 58 பந்தில் 113 ரன்னும் எடுத்தார்.

0 comments:

Post a Comment