ஐ.பி.எல். தொடரில் 175 ரன்கள் குவித்து கிறிஸ் கெய்ல் புதிய சாதனை


ஐ.பி.எல். போட்டியில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் புனே வாரியர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற புனே வாரியர்ஸ் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. 

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தில்சானும், கெய்ல்-ம் ஆரம்பம் முதலே புனே வாரியர்ஸ் அணியின் பந்துவீச்சை மைதானத்தில் நாலாபுறமும் விளாசித் தள்ளினர். 

குறிப்பாக கெய்ல் இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 11 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் 100 ரன்களை கடந்தார். 

ஐ.பி.எல். தொடரில் குறைந்த பந்துகளில் விரைவாக சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். 

இதற்கு முன்னர் யூசுப் பதான் 37 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை கெய்ல் முறியடித்துள்ளார். 

மேலும், இன்றைய ஆட்டத்தில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்து, ஐ.பி.எல். தொடரில் முதன்முதலாக அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 

இவருடைய இந்த அதிரடியில் 17 சிக்சர்களும், 13 பவுண்டரிகளும் அடங்கும். 

இதற்கு முன்பு பெங்களூர் மைதானத்தில் கொல்கத்தா அணி வீரர் மெக்குல்லம் 158 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன் என்பது சாதனையாக இருந்தது. இந்த சாதனையையும் தற்போது கெய்ல் முறியடித்துள்ளார். 

0 comments:

Post a Comment