வாழ்த்து மழையில் டிராவிட்


இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டுக்கு, பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 

இந்தியாவின் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு, நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று வழங்கினார். 

விளையாட்டு துறையில் சிறப்பாக செயல்பட்ட, முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டுக்கு, பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 

தவிர, லண்டன் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற, இந்தியாவின் மேரி கோமுக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 


பத்மஸ்ரீ யோகேஷ்வர்:

லண்டன் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற இந்தியாவின் யோகேஷ்வர் தத், 2012 பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற கிரிஷா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 


10வது கிரிக்கெட் வீரர் 

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், கவாஸ்கர், லாலா அமர்நாத், வினோ மன்கட், உள்ளிட்ட வீரர்கள் வரிசையில் பத்ம பூஷண் விருது பெற்ற 10வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமை பெற்றார் டிராவிட். 

இந்திய அணியின் தூண் என்ற போற்றப்பட்ட இவர், 164 டெஸ்டில் 13, 288 ரன்கள், 344 ஒருநாள் போட்டிகளில் 10,889 ரன்கள் எடுத்துள்ளார். 

பத்ம பூஷண் விருது வென்ற இவருக்கு சக வீரர் ரகானே உள்ளிட்ட பல கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment