ஐ.பி.எல்., ரேட்டிங் குழப்பம்


ஆறாவது ஐ.பி.எல்., தொடர் பார்வையாளர்கள் குறித்த "ரேட்டிங்' விவரம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தற்போது ஆறாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. 

இப்போட்டியை காணும் "டிவி' பார்வையாளர்கள் "ரேட்டிங்' குறித்து குழப்பமான செய்திகள் வெளியாகியுள்ளன. 

சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ் சார்பிலான மல்டி ஸ்கிரீன் மீடியா (எம்.எஸ்.எம்.,) நிறுவனம் வெளியிட்ட செய்தியில்," கடந்த ஆண்டினை விட ஆறாவது ஐ.பி.எல்., தொடர் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. 

முதல் வாரம் நடந்த போட்டிகளை சுமார் ஒரு கோடி பேர் வரை பார்த்துள்ளனர். 

இது இன்னும் அதிகமாகத்தான் இருக்கும். ரசிகர்கள் கொடுத்த இந்த வரவேற்பு மிகவும் "திரில்லாக' உள்ளது,' என, தெரிவித்துள்ளது.

ஆனால், உண்மையில் ஐ.பி.எல்., தொடருக்கு வரவேற்பு குறைந்துள்ளதாக டி.ஏ.எம்., ரேட்டிங் தெரிவிக்கிறது. 

கடந்த ஆண்டு முதல் ஐந்து போட்டிகளை ஒப்பிடும் போது, 3.89 லிருந்து 3.82 ஆக குறைந்துள்ளது. 

முதல் போட்டிக்கான டி.வி., ரேட்டிங் கடந்த ஆண்டினை (5.57) விட இரண்டு சதவீதம் குறைந்துவிட்டதாம் (4.13). 

0 comments:

Post a Comment