ரெய்னாவுக்கு பிடிச்சது 3


தொடர்ந்து மூன்றாவது இடத்தில் களமிறங்குவதையே விரும்புகிறேன்,'' என, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.

சர்வதேச மற்றும் ஐ.பி.எல்., "டுவென்டி-20' போட்டிகளில் கடைசி வரை களத்தில் இருந்து, "பினிஷிங்' செய்வதில் வல்லவர் ரெய்னா. 

இவர், ஐ.பி.எல்., தொடரில் அதிக ரன்கள் (2,294) குவித்த வீரர்கள் வரிசையில், முதலிடத்தில் உள்ளார். "பேட்டிங் ஆர்டர்' குறித்து ரெய்னா கூறியது:

2010ல் வெஸ்ட் இண்டீசில் நடந்த தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான, உலக கோப்பை "டுவென்டி-20' போட்டியில், மூன்றாவது இடத்தில் களமிறங்கி சதம் அடித்தேன். தொடர்ந்து 3வது இடத்திலேயே வர விரும்புகிறேன். 

ஏனெனில், அப்போது தான் அனைத்து பவுலர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியும். இது தான் எனக்கு பிடிக்கும். அதிர்ஷ்டவசமாக பேட்டிங்கில், அதிக ரன்கள் எடுக்கிறேன். இது எதிர்வரும் போட்டிகளிலும் தொடரும் என்று நம்புகிறேன். 

ஐந்து ஆண்டுகள் ஐ.பி.எல்., தொடரில் வெற்றிகரமாக ஜொலிக்கும் போது, தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். கடினமான நேரங்களில் இருந்து மீண்டு, அணி வெற்றி பெற இது உதவும்.

ஆறாவது ஐ.பி.எல்., தொடரில், சென்னை அணி சிறப்பாக உள்ளது. இத்தொடரை மிகவும் எதிர்பார்த்து உள்ளேன். 

"டுவென்டி-20' போட்டிகளைப் பொறுத்தவரை எந்த அணியையும் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. 

ஒவ்வொரு வெற்றிக்கும் கடினமாக போராட வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவது முக்கியம். 
இவ்வாறு ரெய்னா கூறினார்.

0 comments:

Post a Comment