சென்னை அணியின் பிரச்னை - பத்ரிநாத் வருத்தம்


சென்னை அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. விரைவில் இது சரி செய்யப்படும்,'' என, பத்ரிநாத் தெரிவித்தார்.

ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி இதுவரை பங்கேற்ற நான்கு போட்டிகளில் தலா 2 வெற்றி, தோல்வியடைந்தது. 

இதில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் துவக்க வீரர்கள் முரளி விஜய், மைக்கேல் ஹசி இணைந்து 139 ரன்கள் எடுத்தனர். மற்றபடி இந்த ஜோடி 10, 4 ரன்கள் தான் எடுத்தது. 

கடைசியில் சென்னை அணியில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் முதலிடத்தில் (112) இருந்த மைக்கேல் ஹசி நீக்கப்பட்டு, அனிருதா சேர்க்கப்பட்டார். இவர், புனே அணிக்கு எதிராக, ரன்கணக்கை துவக்கும் முன்பே அவுட்டானார். இதுகுறித்து சென்னை வீரர் பத்ரிநாத் கூறியது:

"டுவென்டி-20' போட்டிகளைப் பொறுத்தவரையில் துவக்கம் முக்கியம். "பவர் பிளே'யின் ஓவர்களில் பீல்டர்கள் உள்வட்டத்தில் நிற்பதை பயன்படுத்தி, இவர்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும். இதைப் பொறுத்து தான் "மிடில் ஆர்டர்' உட்பட மற்ற பேட்டிங்கும் சிறப்பாக அமையும்.

எங்களைப் பொறுத்தவரையில் கடந்த தொடரில் டுபிளசி "டாப் ஆர்டரில்' அசத்தினார். 

இம்முறை பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிகளை தவிர, பிற போட்டிகளில் துவக்க வீரர்கள் தேவையான அளவு ரன்களை எடுக்கவில்லை. போவதும் வருவதுமாக உள்ளனர். பேட்டிங், பவுலிங்கை பலப்படுத்தும் வகையில் அனிருதா, ஆல்பி மார்கலை சேர்த்தோம். துரதிருஷ்டவசமாக இது எடுபடவில்லை. 

இதேபோல, இனி வரும் போட்டிகளில் கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக பவுலிங் செய்ய முயற்சிப்போம்.

இவ்வாறு பத்ரிநாத் கூறினார்.

0 comments:

Post a Comment