புஜாரா, முரளி விஜய்யிடம் இருந்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பாடம் கற்க வேண்டும்


இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை அந் நாட்டு முன்னாள் வீரரும், டெலிவிசன் வர்ணனை யாளருமான டீன்ஜோனஸ் விமர்சனம் செய்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- 

இந்திய சுற்றுப் பயணத்துக்காக ஆஸ்திரேலிய அணி தன்னை முழுமையாக தயார்ப்படுத்திக் கொள்ள வில்லை. 4 டெஸ்டில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் மட்டுமே ஆடியது. 

இது போதாது இந்திய தொடருக்கு முன்பு 2 அல்லது 3 பயிற்சி ஆட்டம் என்பது போதுமானதாக இல்லை. புஜாரா, முரளிவிஜய் ஆகியோரது பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர்களிடம் இருந்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஏராளமாக பாடம் கற்க வேண்டும். 

இந்திய மைதானங்களில் எப்படி ரன் குவிக்க வேண்டும் என்பதை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அறிந்து இருப்பது அவசியமாகிறது. இதேபோல ஆஸ்திரேலிய பவுலர்களும் சிறப்பாக பந்துவீசுவதில்லை. இந்தியாவில் ஆஸ்திரேலியா கடுமையாக போராட வேண்டும். 

இவ்வாறு டீன்ஜோன்ஸ் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment