சமூக வலைத்தளங்களில் சச்சின் தான் மாஸ்டர்


இந்திய அணியின் சச்சின் குறித்து தான், சமூக வலைத்தளங்களில் அதிகமான நபர்கள் விமர்சித்துள்ளனர் என, ஐ.பி.எம்., ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றன. மூன்று போட்டிகளின் முடிவில், இந்திய அணி 3-0 என முன்னிலை பெற்று, தொடரை வென்று சாதித்தது. 

போட்டிகளின் போது, சமூக வலைத்தளங்களான "டுவிட்டர்', "பேஸ்புக்', "யூ டியூப்' போன்றவற்றில் இந்திய அணியின் பவுலிங்கை விட, சச்சின் குறித்து தான் அதிகமாக பேசியுள்ளனர். 

இது குறித்து தனியார் நிறுவனமான, ஐ.பி.எம்., நடத்திய ஆய்வில்," தற்போது நடந்து வரும் இந்தியா, ஆஸ்திரேலிய தொடர் குறித்து சுமார் 1.2 லட்சம் பேர், கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். 

இதில் 50 சதவீதத்தினர், இந்திய அணி வீரர் சச்சினின் சாதனை, எதிர்கால ஓய்வு திட்டம் குறித்து தான் விமர்ச்சித்துள்ளனர். 

இவருக்கு அடுத்து கேப்டன் தோனி, முரளி விஜய் ஆகியோர் விளாசிய சதங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். 

ரவிந்திர ஜடேஜாவின் "ஆல்-ரவுண்டர்' திறமை குறித்தும் அதிகம் பேசியுள்ளனர். சமூக வலைத்தளங்களில், இந்திய பவுலர்களில் அதிகமாக பிரபலமானவர் இவர் தான். 

அதிரடி சதம் அடித்து, உலக சாதனை படைத்த ஷிகர் தவான் குறித்து பேசியுள்ளனர்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 

0 comments:

Post a Comment